மொயீன் அலியின் ஒரே ஓவரில் மட்டும் 5 சிக்சர்களோடு 32 ரன்களை எடுத்தார். ராஜஸ்தான் மீண்டும் ஆட்டத்துக்குள் வந்தது. ஹெட்மயரும் நிலைமையை உணர்ந்து ரியான் பராக்குக்கு செகண்ட் பிடில் ஆடியிருந்தார். இந்தக் கூட்டணி 92 ரன்களை சேர்த்தது. கடைசி 4 ஓவர்களில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 43 ரன்கள் தேவைப்பட்டது.
இங்கேதான் ஹர்ஷித் ராணா ட்விஸ்ட் கொடுத்தார். நின்று ஆடிய ஹெட்மயர், ரியான் பராக் இருவரின் விக்கெட்டையும் அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தினார். அவர் வீசிய ஒரு ஸ்லோயர் ஒன்னில் சிக்சர் அடிக்க முயன்று லாங் ஆனில் ரியான் பராக் கேட்ச் ஆனார். 95 ரன்களை எடுத்திருந்தார். நல்ல இன்னிங்ஸ். சதம் அடித்து போட்டியை முடித்துக் கொடுத்திருக்க வேண்டும், தவறவிட்டுவிட்டார்.