சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி, ஓபிஎஸ் திட்டம்
சென்னை: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்க சென்னை வரும் பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி, ஓபிஎஸ் இருவரும் தனித்தனியாக நேரம் கேட்டுள்ளனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் அவ்வப்போது எழும் பிரச்னைகளை டெல்லி பாஜ மேலிட தலைவர்கள் தலையிட்டு தீர்த்து வைத்து வருகிறார்கள். ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்றுத்தான் போராட்டத்தை கைவிட்டதாக அவரே அறிவித்தார்.இப்போதும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்டுள்ள அதிகார யுத்தத்தில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கினாலும்…









