இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும்: ராமதாஸ் டிவிட்

சென்னை: சீன உளவு கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதன் மூலம் இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘சீன உளவு கப்பலுக்கு அனுமதி அளித்த இலங்கை அரசின் செயல் மிகப்பெரிய நம்பிக்கை துரோகம். இது இலங்கையின் சீன பாசத்திற்கு எடுத்துக்காட்டு. ராணுவ உதவி, பொருளாதார உதவி அனைத்தையும் பெற்றுக் கொண்டுதான் இந்தியாவுக்கு இலங்கை துரோகம் செய்கிறது. இதுதான் அதன் குணம். இலங்கையின் துரோகத்தை இந்தியா…

திடீர் பக்கவாதம் ஒரு ரெட் அலெர்ட்! | A sudden stroke is a red alert!

நன்றி குங்குமம் டாக்டர் காலையில் எழுந்து, பல்துலக்கி, டைனிங் டேபிளில் அமர்ந்த எழுபது வயதுகாரர் ஒருவர் திடீரென்று ஒரு மாதிரி வெறுமையாய் விழித்து; இடது கை,  இடது கால் சுவாதீனமற்று  நாற்காலியிலிருந்து சரிந்தார்.  சிறிது நேரம்  ஒன்றும்  புரியாமல்,  அப்படியே எழுந்திருக்க முயன்றார். இடது பக்க உடம்பு ஒத்துழைக்காததால்,  மீண்டும் தரையில் சாய்ந்தார்.  ஓடிவந்த உறவினர்கள், கைத்தாங்கலாக அவரைப் படுக்கையில் படுக்க வைத்தனர்.  அவருக்கு வாய் குளறியது. நன்றாக நடமாடிக்கொண்டிருந்தவர் சில நொடிகளில் பக்கவாதத்தில் முடங்கிப் போனார்.…

கேலோ இந்தியா நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம், வஞ்சிக்கப்படுகிறதா தமிழகம்? தரவுகள் சொல்வது என்ன? | Khelo India State Fund allocations face severe criticism

இந்தாண்டு வெளியிடப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் மாநில வாரியான நிதி ஒதுக்கீடு:கேலோ இந்தியா 2021-22 நிதி பங்கீடுதற்போது நடந்து முடிந்த காமன்வெல்த்தில் இந்தியாவின் சார்பாக மொத்தம் 215 வீரர்கள் வெவ்வேறு போட்டிகளில் பங்கேற்றனர். அதில் வழக்கம் போல் ஹரியானா வீரர்களே அதிகபட்சமாக மொத்தம் 34 பேர் பங்கேற்றார்கள். அதற்கு அடுத்தபடியாக பஞ்சாபிலிருந்து 26 வீரர்களும் தமிழகத்திலிருந்து 17 வீரர்களும் பங்கேற்றனர். மேலும் மகாராஷ்டிராவில் இருந்து 14 பேர், கேரளாவிலிருந்து 13 பேரும் பங்கேற்றுள்ளனர். பதக்கம் வென்றவர்கள் பட்டியல் எடுத்து…

Easy tricolor recipes to show patriotism through food

இந்தியாவில் நுழைந்த அந்நியர்களை விரட்டுவதற்கு சுதந்திர போராட்ட வீரர்கள் சிந்திய ரத்தத்திற்கு ஈடு எதுவும் இல்லை. 1947 ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தின விழாகொண்டாடப்பட்டு வந்தாலும், இந்தாண்டு 75வது பொன்விழா ஆண்டாக அமைந்தது சிறப்பானதாகும்.  இத்தினத்தை உற்சாகத்துடன் கொண்டாட வேண்டும் என்பதற்காக, அனைவரின் வீடுகளிலும் ஆகஸ்ட் 13 முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுகொண்டார். இந்த சூழலில், உங்களின் தேசபக்தியை…

கட்சியின் நற்பெயரை கெடுப்பவர் மீது நடவடிக்கை: ராஷ்டிய லோக் ஜனசக்தி மாநில தலைவர் எச்சரிக்கை

சென்னை: ராஷ்டிய  லோக் ஜன சக்தி கட்சியின் மாநில தலைவர் ஏ.பி.சசிகுமார்  சென்னையில் அளித்த பேட்டி: பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை வாழ்த்துவது  போன்று எங்களது கட்சி தலைவர் பசுபதிகுமார் பாரஸ் புகைப்படத்துன் கூடிய வாழ்த்து போஸ்டர் அனைத்து பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளது. நிதிஷ்குமாருக்கும், கட்சியினருக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக  சில சமூக விரோதிகள் தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். நான் மாநில தலைவராக பொறுப்பேற்ற நாள் முதல் தொடர்ந்து கட்சியை…

வழுவழு கைகள்… வாளிப்பான கால்கள்…

நன்றி குங்குமம் டாக்டர் ஹோம்லி பெடிக்யூர் – மெனிக்யூர்பெண்கள் பெரும்பாலும் தங்கள் அழகுப் பராமரிப்பில் முகம், தலைமுடிக்கு அடுத்தபடியாக கவனம் செலுத்துவது கை மற்றும் … Source link

காமன்வெல்த் விளையாட்டு | பதக்கம் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை | Commonwealth Games Incentives for medal winners of India

புதுடெல்லி: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் (ஐஓஏ) சார்பில் நேற்று ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. பிரிட்டனின் பர்மிங்ஹாம் நகரில் அண்மையில் நடைபெற்று முடிந்த 22-வது காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் உள்பட மொத்தம் 61 பதக்கங்களை வென்றது. தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் அசந்தா சரத் கமல் அதிகபட்சமாக 3 தங்கம் உள்பட 4 பதக்கம் வென்றார். இந்நிலையில் இந்திய ஒலிம்பிக்…

75வது சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

சென்னை: 75வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்பாடு செய்துள்ள தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு விருந்தினர்கள் பலருக்கும் ஆளுநர் தேநீர் விருந்து வழங்குகிறார். விருந்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், நீதிபதிகள், தொழிலதிபர்கள், அரசு செயலர்கள் பங்கேற்றுள்ளனர்.    Source link

பட்நவிசுக்கு உள்துறை, நிதித்துறை முதல்வர் ஷிண்டேவுக்கு ‘டம்மி’ துறை ஒதுக்கீடு: மகாராஷ்டிராவில் பாஜ ஆதிக்கம்

மும்பை: சிவசேனா அதிருப்தி அணியின் தலைவராக இருந்த ஏக்நாத் ஷிண்டே, கடந்த ஜூன் 30ம் தேதி மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வராக பாஜ,வின் மூத்த தலைவர் தேவேந்திர பட்நாவிஸ் பொறுப்பேற்றார். ஒரு மாதத்துக்கு பிறகு கடந்த 9ம் தேதி அமைச்சரவையில் புதிதாக 18  அமைச்சர்கள் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் முதல்வர், துணை முதல்வர் உட்பட அனைவருக்கும் நேற்று இலாகாக்களை முதல்வர் ஷிண்டே  ஒதுக்கினார்.  நகர்புற வளர்ச்சி துறையை தன்னிடம் வைத்து கொண்ட ஷிண்டே, பட்நாவிசுக்கு முக்கிய துறைகளான…