அதிமுகவினர் அனைவரும் கொடி ஏற்றுவது ஐயமே எங்களுக்கே தேசிய கொடி இன்னும் கிடைக்கவில்லை: செல்லூர் ராஜூ தடாலடி
மதுரை: அதிமுகவினர் அனைவரும் தேசியக்கொடி ஏற்றுவது ஐயமே. எங்களுக்கே தேசியக்கொடி கிடைக்கவில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். 75வது சுதந்திரதின அமுத பெருவிழாவை முன்னிட்டு, மதுரை கே.கே.நகரில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா முழு உருவச்சிலைகளுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று மாலை அணிவித்தார். பின்னர் சிலை வளாகப்பகுதி சுற்றிலும், தேசிய கொடியை கட்டி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நாட்டு மக்கள் அனைவரும் தேசியக்கொடியை ஏற்றி வைக்கும் பாக்கியம் கிடைத்துள்ளது. வீடுகளில், சாதாரண…









