அதிமுகவுக்கு நல்ல நீதி கிடைத்துள்ளது தனி நபருக்கு கட்சியை கொண்டு செல்ல நினைத்தால் அது நடக்காது: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை: தனி நபருக்கோ, குழுவிற்கோ அல்லது குடும்பத்துக்கோ இயக்கத்தை கொண்டு  செல்ல வேண்டும் என்று நினைத்தால் அது நடக்காது என்று நல்ல  நீதி அதிமுகவுக்கு கிடைத்துள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்த வழக்கில், உயர் நீதிமன்ற தீர்ப்பு ஓபிஎஸ் அணியினருக்கு சாதகமாக வந்ததை தொடர்ந்து, நேற்று மதியம் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர், ஜெயலலிதா சமாதிக்கு சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.பின்னர், ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:எம்ஜிஆர், ஜெயலலிதா…

doctor vikatan – பெரியவர்களும் பேபி சோப் பயன்படுத்தலாமா? | doctor vikatan – Can adults use baby soap

எனவே, நாம் தேர்ந்தெடுக்கும் சோப்பானது சருமத்தின் பி.ஹெச் அளவிலேயே இருக்க வேண்டும். சோப்பின் பி.ஹெச் அளவானது அதிகரிக்கும்போது, அது நம் சருமத்தின் பி.ஹெச் அளவையும் அதிகரித்துவிடும்.சருமத்தின் பி.ஹெச் அளவு அதிகரிக்கும்போது, அது நீர்ச்சத்தை இழந்து வறண்டு போகும். சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்கள் சிண்டெட் பார் (Syndet bar) என்பதை உபயோகிக்கலாம். மற்றவர்கள் நம் சருமத்தின் ஈரப்பதத்தை பாதிக்காதவகையில் பி.ஹெச் பேலன்ஸ் உள்ள மைல்டான சோப்தான் பயன்படுத்த வேண்டும்.உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள்…

அதிகாரப் போட்டி, நிர்வாகக் கோளாறு – தடையினால் தள்ளாடும் இந்தியக் கால்பந்து! தீர்வுதான் என்ன? – Indian football fans saddened over FIFA’s ban on AIFF

இந்திய ஆண்கள் அணியுமே எந்தவிதமான சர்வதேசப் போட்டிகளிலும் பங்கேற்க முடியாது. இந்தியன் சூப்பர் லீக் தொடர் நடைபெறுவதில் எந்த சிக்கலும் இல்லையெனினும் வெளிநாட்டு வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் சிக்கல் இருக்கக்கூடும். இது சில அணிகளுக்கு பின்னடைவாகவும் இருக்கும். ஒட்டுமொத்தத்தில் இந்தத் தடை உத்தரவு இந்திய கால்பந்திற்கு பெரும் சறுக்கலாகவே பார்க்கப்படுகிறது.FIFA அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி தேர்தலை முறையாக நடத்தி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறபட்சத்தில் இந்தத் தடை உத்தரவு விலக்கிக்கொள்ளப்படும். மேலும், இதுதொடர்பான வழக்கும் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.…

ஃபிஃபாவின் தடையால் இந்திய கால்பந்து வீராங்கனைகளுக்கு என்ன பாதிப்பு?

ஜானவி மூலேபிபிசி மராத்திஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், INDRANIL MUKHERJEE/AFPபடக்குறிப்பு, ஃபிஃபாவின் இடைநீக்க நடவடிக்கையால் இந்திய மகளிர் கால்பந்து அணி வீராங்கனைகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.”உலக கோப்பைக்காக நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். நான் அணியில் இடம் பெறவில்லை, ஆனால் விளையாட்டுகளைப் பார்க்கப் போகிறேன். உலக கோப்பையை நடத்துவது நம் நாட்டிற்கு ஒரு பெரிய கெளரவம். ஆனால் இப்போது அது நடக்காது என்ற நிலை வந்திருப்பது என்னை வருத்தப்படுத்துகிறது.”அகில இந்திய கால்பந்தாட்ட அமைப்பு மீதான ஃபிபாவின்…

எம்ஜிஆர், ஜெயலலிதா நடத்தியது போலவே நாங்கள் பொதுக்குழுவை நடத்தியுள்ளோம்: கே.பி.முனுசாமி பேட்டி

சென்னை: எம்ஜிஆர், ஜெயலலிதா நடத்தியது போலவே நாங்கள் பொதுக்குழுவை நடத்தியுள்ளோம் என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். ஜூலை 11ம் தேதி ஈபிஎஸ் நடத்திய அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய கே.பி.முனுசாமி; எம்ஜிஆர், ஜெயலலிதா நடத்தியது போலவே நாங்கள் பொதுக்குழுவை நடத்தியுள்ளோம். பொதுக்குழுவில் பங்கேற்ற உறுப்பினர்கள் ஜூன் 23-ல் கொண்டு வரப்பட்ட தீர்மானங்களை ஒருமனதாக…

ஒரேயொரு நெட்வொர்க், மாவட்டத்தின் மகப்பேறு இறப்பு எண்ணிக்கை அதிரடி குறைவு: சாத்தியமானது எப்படி?|One network reduced Maternal mortality rate

திருநெல்வேலி மாவட்டத்தில், 2021-ம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரை மகப்பேறு இறப்புகள் 14 -ஆக பதிவான நிலையில், இந்தத் திட்டத்திற்குப் பிறகு, மூன்றே இறப்புகள் மட்டும் பதிவாகியுள்ளன. 52 ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், எட்டு தாலுக்கா, தாலுக்கா அல்லாத மருத்துவமனைகள் மற்றும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆகியவை இந்த நெட்வொர்க்கில் இணைந்துள்ளன.“பெருந்தொற்றுக் காலத்தில் நோயாளிகளின் தரவுகளை சேகரிக்கத் தொடங்கியபோது தான், இந்த யோசனை எங்களுக்கு வந்தது. இதேபோன்ற அமைப்பைப்…

2023-27 காலகட்டத்தில் 777 சர்வதேச போட்டிகள்: ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு | icc releases future tour programme for mens cricket full detail odi rised

துபாய்: எதிர்வரும் 2023-27 காலகட்டத்தில் நடைபெற உள்ள டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆடவர் கிரிக்கெட் ஃபார்மெட்டுக்கான போட்டிகள் தொடர்பான சுற்றுப்பயண திட்டத்தினை வெளியிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி). நடப்பு 2019-23 கிரிக்கெட் போட்டிகளுக்கான எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது எதிர்வரும் 2023-27க்கான போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐசிசி-யின் முழு நேர உறுப்பினர்களுக்கான சர்வதேச கிரிக்கெட் அட்டவணை உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளதாக சொல்லப்பட்டுள்ள நிலையில் அந்த ஃபார்மெட் போட்டிகளின்…

chicken gravy with simple recipe tips

சிக்கன் குழம்பு எப்படி வைத்தாலும் கறியின் சுவையால் அந்த குழம்புக்குத் தேவையான சுவை கிடைத்துவிடும். இப்படி சுவையே இல்லாமல் செய்தாலே ருசி கிடைக்குமெனில் முறையாக, பக்குவமாக செய்தால் எப்படி இருக்கும்..! அப்படியான சுவைக்கான ரெசிபிதான் இது…தேவையான பொருட்கள் :வறுத்து அரைக்க..கல்பாசி – 2 பிரிஞ்சு இலை – 2 கிராம்பு – 2 ஏலக்காய் – 1 அன்னாசி பூ – 1 மராதிமொக்கு – 1 பட்டை – 1 துண்டு சீரகம் – 1…

அதிமுக பொதுக்குழு வழக்கில் பழைய நிலையே தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சென்னையில் ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இணைந்தே பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராகவும், தம்மை கட்சியில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நிலையில் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் அறிவித்தார்.இந்நிலையின் இன்று அவர்…

அதிமுகவின் கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும்: ஓபிஎஸ் அறிக்கை

சென்னை: அடுத்தவர் வீட்டை மட்டுமல்ல, அரசியல் கட்சியையும் யாரும் அடாவடியாக, சட்டத்திற்குப் புறம்பாக அபகரிப்பதை நீதியும், தர்மமும் ஏற்றுக்கொள்ளாது என்பதை இன்றைய தீர்ப்பு மெய்ப்பித்து இருக்கிறது. அதிமுகவின் கசந்த காலங்கள் இனி வசந்த காலங்களாக மாறும்” என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்ததும் செல்லாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தர்மத்தை நம்பினேன் நீதிமன்றங்களை நம்பினேன் அதிமுகவை உயிராக நேசிக்கும் கழகக்…