ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி விடியவிடிய ஆலோசனை: இரு தரப்பினர் திடீர் மோதலால் பரபரப்பு
சென்னை: ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து இபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் விடிய விடிய ஆலோசனை நடத்தினார். ஆலோசனையில் இரு தரப்பினருக்குள் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உயர்நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக, தனது ஆதரவாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது நிர்வாகிகள் பலர் ஓபிஎஸ்சுடன் இணங்கி போகலாம். அவரை கட்சியில் இணைத்து செயல்படுவோம். அடுத்த ஆண்டு பொதுக்குழு கூடும் போது நம்முடைய பலத்தை நிரூபித்து வெற்றி…









