செஸ் ஒலிம்பியாட்… இந்திய பி அணி 2வது முறையாக எதிரணியை வாஷ் அவுட் செய்து அசத்தல்
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் ஆடவர் பிரிவில், இந்திய ‘பி’ அணியில் நம்பிக்கை நட்சத்திரம் பிரக்ஞானந்தா வெற்றிபெற்று, தன் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளார். அத்துடன் ‘பி’ அணி, தொடர்ந்து இரண்டாவது முறையாக எதிரணியை வாஷ்-அவுட் செய்து அசத்தியது.சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி களைகட்டியுள்ளது. இதன் ஆடவர் பிரிவில் இந்திய ‘ஏ’ அணி, தனது இரண்டாவது சுற்று போட்டியில் மால்டோவா உடன் மோதியது. சொந்த மண்ணில் நடைபெறும் இந்த போட்டியில் வீரர்கள் உற்சாகத்துடன் காய்களை நகர்த்தி…









