என் உயிர் இதில் தான் அடங்கி இருக்கிறது! – இல்லத்தரசி பகிர்வுகள்| My Vikatan | My Vikatan article about home maker
அடுத்தது சமையல்.. அதுதக்காளி ரசமானாலும் சரி வெஜிடபிள் பிரியாணியாக இருந்தாலும் சரி.. நானே புளியை கரைத்து (இதமாய் பதமாய்) போடவேண்டிய சாமான்களைப் போட்டு பச்சை மல்லி தழையைத் தூவி இறக்கி, சூடான சோற்றில் வளைக்கரங்களால் ஊற்ற , (சிலசமயம் கையில் வாங்கி குடிப்பார் மாமா) எதையோ பெரிதாக சாதித்தது போல் ஒரு உணர்வு வரும்.அதே போல்தான் வெஜிடபிள் பிரியாணியும் காய்கறிகளை எல்லாம் பார்த்துப் பார்த்து நறுக்கி , தாளிப்பு சாமான்களை போட்டு , பாஸ்மதி அரிசியை சேர்த்து…









