Browsing: அரசியல்

குஜராத் தேர்வு முடிவுகள்: வடக்கு ஜாம்நகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவி 3-வது இடம்

குஜராத் தேர்வு முடிவுகள்: வடக்கு ஜாம்நகர் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் 2-வது இடத்தில் உள்ளார். கிரிக்கெட் வீரர் ஜடேஜாவின் மனைவியான பாஜக வேட்பாளர் ரிவாபா ஜடேஜா மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். Source link

சொல்லிட்டாங்க…

* நாடாளுமன்றம், நீதித்துறை, நிர்வாகம் ஆகியவை மற்ற அதிகாரங்களில் ஊடுருவினால் அரசு அமைப்பு சீர்குலைந்து விடும். – துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்* கூட்டுறவுச் சங்கங்கள் மாநிலத்துக்கு தொடர்பானது. ஒன்றிய அரசு, மாநில அரசுகளின் எல்லையில் அத்துமீறி நுழைந்துள்ளது. – மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி * கர்நாடாகாவில் மராத்தியர்கள் தாக்கப்படும்போது பலவீனமாக மகாராஷ்டிரா அரசு செயல்படுகிறது. இதுதான் ஏக்நாத் கூறிய புரட்சி. – சிவசேனா எம்பி., சஞ்சய் ராவத் * காங்கிரஸ் எப்போதும்…

தமிழக பாஜ உட்கட்சி விவகாரம் எதிரொலி அண்ணாமலையிடம் டெல்லி மேலிடம் விசாரணை

சென்னை: தமிழக பாஜ உட்கட்சி விவகாரத்தை தொடர்ந்து, அண்ணாமலையிடம் டெல்லி மேலிடம் திடீர் விசாரணை நடத்தியுள்ளது. தமிழக பாஜ தலைவராக இருந்த எல்.முருகன், ஒன்றிய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து புதிய தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கடந்த ஆண்டு ஜூலை 8ம் தேதி நியமனம் செய்யப்பட்டார். அவர், பாஜ தலைவரானதில் இருந்து தமிழக பாஜ தலைவர்கள் யாரையும் மதிப்பது இல்லை. யாரிடமும் எந்த ஆலோசனையும் கேட்பதும் இல்லை. சீனியர்களான பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன்,…

மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி வலுவுடன் உள்ளது; துரை வைகோ

கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ அளித்த பேட்டி: நாடாளுமன்ற தேர்தலில் மதிமுக எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பதை மதிமுக தலைமையும் மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலினும் இணைந்து முடிவு செய்வர். 2024 நாடாளுமன்ற தேர்தலில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜ மதவாத சக்திகளை எதிர்க்கும் அனைத்து இயக்கங்களும் ஓரணியில் கூட்டணியாக திரள வேண்டும்.தமிழக மக்களின் நலனுக்கு ஆளுநர் செயல்படவில்லை. தமிழகத்தில் மதசார்பற்ற ஜனநாயக கூட்டணி…

50 கி. மீட்டருக்கு ஒரு தொண்டரை வைத்துள்ள கட்சியெல்லாம் முதல்வரை பற்றி பேசுகிறது: திமுகவில் இணைந்த கோவை செல்வராஜ் பேட்டி

சென்னை: முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்தார். கோவை மாநகர் மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்த கோவை செல்வராஜ், அண்மையில் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஓபிஎஸ் அணியால் நீக்கப்பட்டார். கட்சிப் பணிகளில் அவர் முழுமையாக ஈடுபாடு காட்டாத காரணத்தால், பொறுப்புகளிலிருந்து நீக்குவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு விளக்கமளித்தது. இதையடுத்து அவர் அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்தார். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு,…

2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அண்ணாமலை நாளை ஆலோசனை

சென்னை: 2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை ஆலோசனை நடத்துகிறார். சென்னை கமலாலயத்தில் நாளை காலை 10 மணிக்கு மாவட்ட பாஜக தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். தமிழகம் முழுவதும் அண்ணாமலை சுற்றுப்பயணம் செய்ய உள்ளது குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Source link

சொல்லிட்டாங்க…

அண்ணல் அம்பேத்கரின் போராட்டங்கள் லட்சக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கையை அளித்தன. – பிரதமர் நரேந்திர மோடிவிலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது குறித்து விவாதிக்க வேண்டும். – காங்கிரஸ் கட்சி மக்களவை தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிகுஜராத் சட்டமன்ற தேர்தலில் ஒரு புதிய கட்சி 20 சதவீத வாக்கை பெறுவது மிகப்பெரிய விஷயம். – புதுடெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்எடப்பாடி அதிகாரத்தில் இருந்தபோது, பாஜ அரசின் நடவடிக்கைகளை ஆதரித்து தமிழகத்தில் பாஜ காலூன்ற எல்லா உதவிகளையும்…

ஜெயலலிதா 6ம் ஆண்டு நினைவு நாள் எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா, தினகரன் என 4 அணியாக சமாதிக்கு சென்று மரியாதை: காலை முதல் பகல் வரை போக்குவரத்து நெரிசல்

சென்னை: ஜெயலலிதாவின் 6ம் ஆண்டு நினைவு நாளையொட்டி நேற்று எடப்பாடி பழனிசாமி,  ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டி.டி.வி.தினகரன் என 4 அணிகளாக மெரினா கடற்கரை அருகே உள்ள ஜெயலலிதா சமாதிக்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதனால் காலை முதல் பிற்பகல் வரை கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி காலமானார். அவரின் 6ம் ஆண்டுநினைவு நாளான நேற்று (திங்கள்) காலை…

ஐஐடிகளில் பணி நியமனங்களை கண்காணிக்க எம்பிக்களை கொண்ட குழு அமைக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: ஐஐடிகளில் பணி நியமனங்களை கண்காணிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட குழு அமைக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை ஐ.ஐ.டியில் 2021 மார்ச் நிலவரப்படி பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் என மொத்தம் 596 பேர். அவர்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 62 பேர், அதாவது 10.40 சதவீதம் மட்டும் தான். பட்டியலினத்தவர் எண்ணிக்கை 16, அதாவது 2.68 சதவீதம் மட்டும் தான்.…

தமிழகத்திற்கு ஆளுநர் தேவையில்லை; வாக்குக்காக அம்பேத்கர் புகழ்பாடும் பாஜக: சீமான் பேட்டி

சென்னை: வாக்குக்காக மட்டுமே அம்பேத்கர் பற்றி பாஜக பேசி வருகிறது என்று சீமான் விமர்சனம் செய்துள்ளார். சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 66வது நினைவு தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி சென்னையில் உள்ள அம்பேத்கர் நினைவு மண்டபத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; வாக்குதான் காரணம், எந்த அளவிற்கும் பாஜக செல்லும். வல்லபாய் பட்டேலுக்கு எதற்காக ரூ.3,000 கோடியில்…

1 54 55 56 57 58 161