Browsing: அரசியல்

பாஜ சார்பில் வரும் 18ம்தேதி சென்னையில் கிறிஸ்துமஸ் பெரு விழா: தலைவர் அண்ணாமலை பங்கேற்பு

சென்னை: தமிழக பாஜ துணை தலைவர் கரு.நாகராஜன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தலைமையில் தமிழக பாஜ கட்சி நடத்தும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா வரும் 18ம்தேதி மாலை 6 மணி அளவில் சென்னை கீழ்ப்பாக்கம் செயின்ட் ஜார்ஜ் அரங்கத்தில் நடைபெற உள்ளது. விழாவுக்கு, மாநில தலைவர் அண்ணாமலை தலைமை ஏற்று மாணவர்களுக்கு ஊக்க பரிசுகளை வழங்குகிறார். தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர் ஷேக் தாவூத், நாகூர் தர்கா ஷாகிப் காதிரி,…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.3,000: அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 3,000 ரூபாய் ரொக்கமாக வழங்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வேட்டி-சேலை வழங்குவது, பொங்கல் தொகுப்பு வழங்குவது, ரொக்கமாக பணம் வழங்குவது என்பது பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வருகின்ற ஒரு நடைமுறையாகும்.அரசு பணம் விரயமாவதைத் தடுக்கும் வகையிலும்,…

போதை மருந்து கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

சென்னை: போதை மருந்து கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இதுகுறித்து அவர்நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அரியலூர்ஜெயங்கொண்டம் அருகே காசாங்கோட்டை கிராமத்தில் இரு வகுப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அருண்குமார் உள்பட சிலர் மீது தீண்டாமை மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 25.11.2022 அன்று அருண்குமார் உள்பட வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய அருண்குமார் வீட்டிற்கு காவல் துறையினர் சென்றுள்ளனர். அங்கு அவர் இல்லாததால், 53…

சொல்லிட்டாங்க…

நாட்டில் ஆர்எஸ்எஸ், பாஜவால் பரப்பப்படும் பயம் மற்றும் வெறுப்பை எதிர்த்து நிற்பதுதான் ஜோடோ யாத்ரா. – காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திஅரசியலில் இருந்து என்னை யாராலும் ஒழித்துவிட முடியாது. எனக்கு சுய பலம் இருக்கிறது. – கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாஇளைஞர்களின் உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும். – பாமக தலைவர் அன்புமணி8 ஆண்டுகளாக பிரதமர் மோடி ஆட்சியில் பாஜ பரப்பி வரும் மதவாத வெறுப்பு அரசியலினால் மக்கள் பிளவுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.…

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, துரை வைகோ நேரில் வாழ்த்து..!

சென்னை: விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலினுக்கு, மதிமுக தலைமைச் செயலாளர் துரை வைகோ நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள, திமுக இளைஞர் அணிச் செயலாளர் அன்பு சகோதரர் உதயநிதி ஸ்டாலினை இன்று காலை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து அவருடைய பணிகள் சிறக்க வாழ்த்து தெரிவித்தேன்.இந்நிகழ்வில், கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர்கள் மல்லை சத்யா, தி.மு.இராசேந்திரன், கொள்கை…

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 ரொக்கமாக வழங்க வேண்டும்: ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்

சென்னை: பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 3,000 ரூபாய் ரொக்கமாக வழங்க வேண்டும் என  ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்  வேட்டி-சேலை வழங்குவது, பொங்கல் தொகுப்பு வழங்குவது, ரொக்கமாக பணம் வழங்குவது என்பது பல ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வருகின்ற ஒரு நடைமுறையாகும்.அரசு பணம் விரயமாவதைத் தடுக்கும் வகையிலும்,…

மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் அறிவிப்பு திமுக மாணவர் அணி நிர்வாகிகள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்: மாவட்ட செயலாளர்கள் முன்னிலையில் நேர்காணல்

சென்னை: திமுக மாணவர் அணி நிர்வாகிகள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், அவர்களிடம் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் முன்னிலையில் நேர்காணல் நடத்தி நியமிக்கப்படுவார்கள் என்று மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் அறிவித்துள்ளார். இதுகுறித்து, திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக மாணவர் அணியின் மாவட்ட, மாநகர, நகர, பகுதி, ஒன்றிய, பேரூர், வட்ட, பாகம் வரையிலான நிர்வாக கட்டமைப்பு கீழ்காணும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. மாவட்ட அமைப்பு: ஒரு அமைப்பாளர், 5 துணை அமைப்பாளர்கள்…

பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை கண்டறிய பறக்கும் படை: பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க பறக்கும் படைகள் அமைக்கப் பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 2021-22 ஆம் ஆண்டை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால், அண்டை மாநிலமான கர்நாடகத்தில் பொது இடங்களில் புகைப்பிடித்ததாக ஒரு லட்சத்து 47,319 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தை விட 10 மடங்கு ஆகும். அதேபோல், கேரளத்தில் 73,464, இமாலயப்…

அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக இருப்பார்: தலைவர்கள் வாழ்த்து

சென்னை: அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் இளைஞர்களுக்கு வரப்பிரசாதமாக இருப்பார் என்று பல்வேறு கட்சி, இயக்க தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கவர்னர் மாளிகையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நேற்று பொறுப்பேற்றார். பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்ட தலைவர்கள் பலர் உதயநிதியை பாராட்டி பேசினர். சபாநாயகர் அப்பாவு: ஒரு இளைஞர் விளையாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்கும் போது நாட்டிலுள்ள அனைத்து மாணவ, மாணவிகளுக்கும், இளைஞர்களுக்கும் உற்சாகத்தை கொடுக்கும். அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி: பொதுவாக ஆய்வுக்கு சென்றால் பிறரின்…

தமிழக அமைச்சராக பதவியேற்றார் உதயநிதி ஸ்டாலின்: ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

சென்னை: தமிழக அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றார். ஆளுநர் ஆர்.என். ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 2011ம் ஆண்டின் இறுதியில் திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் அறிமுகமான உதயநிதி ஸ்டாலின் 2012ம் ஆண்டு கதாநாயகனாக உருவெடுத்தார்.அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தமிழ்நாட்டின் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக உதயநிதி ஸ்டாலின் மாறினார். சினிமாவைத் தவிர அரசியலிலும் காலடி எடுத்து வைத்த உதயநிதி ஸ்டாலினுக்கு பொதுமக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். கட்சியின் தொண்டர்களிடையேயும் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆதரவு பெருகிய…

1 50 51 52 53 54 161