அமைச்சர் பொறுப்பை சவாலாக எடுத்துக் கொண்டு செயல்பாடுகள் மூலம் மக்கள் மனங்களை வெல்வேன்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை..!
சென்னை: அமைச்சர் பொறுப்பை சவாலாக எடுத்துக் கொண்டு செயல்பாடுகள் மூலம் மக்கள் மனங்களை வெல்வேன் என உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் அரசியல் திசை வழியைத் தொடங்கிவைத்த முன்னோர்கள் அடியொற்றி, திராவிட நிலத்தில் திராவிட மாடல் அரசில் இளையோனாக இணைய வாய்ப்பளித்த கழகத் தலைவர், முதலமைச்சருக்கு நன்றி. நூற்றாண்டு கண்ட திராவிடக் கொள்கை ஆழ வேரூன்றி, ஆல்போல் தழைத்து தமிழகத்தைக் காத்து நிற்கிறது. இந்த மரத்தைத் தாங்கி…









