Browsing: அரசியல்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 28ம் தேதி நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் விழா குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. Source link

பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைக்கும் என நம்பிக்கை இருக்கிறது: அண்ணாமலை பேட்டி

சென்னை,: பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைக்கும் என நம்பிக்கை இருக்கிறது என தமிழகபாஜ தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் ஒன்றிய அரசு குறைத்து இருக்கிறது. இதற்கு முன்பு நவம்பர் மாதத்தில் ஒன்றிய அரசு விலை குறைத்து இருக்கிறது. இந்த 6 மாத காலத்தில் ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை ரூ.14.50 ஆக குறைத்து இருக்கிறது. அதேபோல் டீசல் விலையை ரூ.17 ஆக…

மேற்கு வங்கத்தில் பாஜ எம்பி. மீண்டும் தாவல்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜ.வில் இணைந்த அக்கட்சியின் மாநில துணைத் தலைவரும் எம்பி.யுமான அர்ஜூன் சிங் நேற்று மீண்டும் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அர்ஜூன் சிங், கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலின் போது பாஜ.வில் இணைந்தார். அங்கு அவருக்கு பராக்பூர் மக்களவை தொகுதி ஒதுக்கப்பட்டது. இதில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்றார். கடந்த சில நாட்களாக அவர் மீண்டும் தாய் கட்சியான திரிணாமுல் காங்கிரசில்…

மடியில் கனம் இருப்பதால் எதிர்க்கட்சியாக செயல்பட அதிமுக தவறிவிட்டது: டிடிவி தினகரன் பேட்டி

திருவண்ணாமலை: அதிமுக மடியில் கனம் இருப்பதால், எதிர்க்கட்சியாக செயல்பட தவறிவிட்டனர் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நேற்று திருவண்ணாமலை வந்திருந்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அளித்த பேட்டி: அதிமுக மடியில் கனம் இருக்கிறது. அதனால் அவர்களுக்கு பயமிருக்கிறது. எனவே, எதிர்க்கட்சியாக செயல்படாமல் அமைதியாக இருக்கிறார்கள். எதிர்க்கட்சியாக செயல்பட தவறிவிட்டனர். ஆட்சியில் இருந்தபோதே அவர்கள் வலிமையாக செயல்படவில்லை. பிரதான எதிர்க்கட்சி இடத்தை பிடிக்க பாஜ முயற்சிக்கிறது. ஒரு…

சொல்லிட்டாங்க…

* மோடியின் 8 ஆண்டுகால ஆட்சியில் வடகிழக்கு மாநில இளைஞர்கள் துப்பாக்கிகள், பெட்ரோல் குண்டுகளை எடுத்து செல்வதில்லை. – உள்துறை அமைச்சர் அமித்ஷா* பாமக வித்தியாசமானது. எனக்கு பதவி ஆசையெல்லாம் கிடையாது.‌ ஆனால் ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் போதும். – பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி * குடும்ப வன்முறைக்கு எதிராகவும், குடும்ப கட்டமைப்பு ஜனநாயகப்படுத்தப்படுவதற்காகவும் தீவிர பிரசாரம் முன்னெடுக்கப்பட வேண்டும். – மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்* அதிமுக மடியில் கனம் இருக்கிறது. எனவே, எதிர்கட்சியாக…

31 வது நினைவு நாள் ராஜிவ்காந்தி நினைவிடத்தில் காங். கட்சியினர் மலர் அஞ்சலி

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ்காந்தி நினைவிடத்தில் அவரது 31வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி நேற்று காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். ஸ்ரீபெரும்புதூரில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி இறந்த இடத்தில் ராஜீவ் அறக்கட்டளை சார்பில், நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பிறந்த நாள் மற்றும் நினைவு நாள் அன்று காங்கிரஸ் கட்சியினர் மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது 31வது ஆண்டு நினைவு தினம் நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தபட்டது. இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர்…

சென்னையில் வரும் 28ம் தேதி சிறப்பு பொதுக்குழு பாமக தலைவராக அன்புமணி தேர்வாகிறார்? ஜி.கே.மணிக்கு வேறு பதவி வழங்க திட்டம்

சென்னை: சென்னையில் வருகிற 28ம் தேதி பாமக சிறப்பு பொதுக்குழு கூடுகிறது. இதில் பாமக தலைவராக அன்புமணி நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் ஜி.கே.மணிக்கு வேறு பதவி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் வருகிற 28ம் தேதி (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் சென்னை அடுத்த திருவேற்காட்டில் நடக்கிறது. கூட்டத்திற்கு பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமை வகிக்கிறார். பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி முன்னிலை வகிக்கின்றனர். பொதுச்செயலாளர் வடிவேல்…

ராஜிவ் காந்திக்கு தகுதி சான்றிதழ் வழங்கும் அளவுக்கு சீமான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை: கே.எஸ்.அழகிரி தாக்கு

சென்னை: ராஜிவ் காந்திக்கு தகுதி சான்றிதழ் வழங்கும் அளவுக்கு சீமான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 31வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, தமிழக காங்கிரஸ் சார்பில் சைதாப்பேட்டையில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜிவ் காந்தியின் உருவப் படத்துக்கு…

பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து நளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலை குறித்து சட்ட வல்லுனர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!!

புதுடெல்லி: பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 பேர் விடுதலை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991ம் ஆண்டு மே  21ம் தேதி நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம்  தொடர்பாக பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் ஆகியோருக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதன்பின்…

28ம் தேதி சிறப்பு பொதுக்குழு கூடுகிறது.. பாமக தலைவராக அன்புமணி தேர்வாகிறார்? ; ஜி.கே.மணிக்கு வேறு பதவி வழங்க திட்டம்

சென்னைசென்னையில் வருகிற 28ம் தேதி பாமக சிறப்பு பொதுக்குழு கூடுகிறது. இதில் பாமக தலைவராக அன்புமணி நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் ஜி.கே.மணிக்கு வேறு பதவி வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.பாமகவின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் வருகிற 28ம் தேதி(சனிக்கிழமை) காலை 11 மணியளவில் சென்னையை அடுத்த திருவேற்காட்டில் நடக்கிறது. கூட்டத்திற்கு பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமை வகிக்கிறார். பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், …

1 148 149 150 151 152 161