Browsing: அரசியல்

அதிமுகவில் மோதல் நிலவி வரும் நிலையில், வருகிற 26ம் தேதி முதல் புரட்சிப்பயணம் மேற்கொள்ளும் சசிகலா!!

சென்னை : சசிகலா வருகிற 26ம் தேதி முதல் புரட்சிப்பயணத்தை மேற்கொள்ள இருப்பதாக அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், ‘தமிழ் மண்ணின் உரிமைகளை காத்திடவும், பெண்ணினத்தின் பெருமைகளைப் பேணி காத்திடும் வகையிலும் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் புரட்சிப்பயணத்தை தொடங்குகிறார். சத்துணவு கண்ட சரித்திர நாயகனின் பெருமைகளையும், தாலிக்கு தங்கம் தந்த தவப்புதல்வியின் எண்ணங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் மகத்தான பயணமாக மேற்கொள்ளவிருக்கிறார்.புரட்சிப்பயணத்தை வருகின்ற 26-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 12.30 மணிக்கு, தியாகராய நகர் இல்லத்திலிருந்து…

அதிமுக பொதுக்குழு முடிந்துள்ள நிலையில் ஓபிஎஸ் அணியினர் டெல்லி பயணம்

சென்னை: அதிமுக பொதுக்குழு முடிந்துள்ள நிலையில் ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன் ரவீந்திரநாத் எம்.பி. உள்ளிட்ட 5 பேர் இன்றிரவு டெல்லி செல்லவுள்ளனர். தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றத்தை அணுகுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. Source link

சொல்லிட்டாங்க…

* திமுகவை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போயிருக்கிறார்களே தவிர, திமுக அழிந்ததாக வரலாறு கிடையாது. – முதல்வர் மு.க.ஸ்டாலின்* வேலைவாய்ப்பு உருவாக்குவதோடு, வளரும் நாட்டை வளர்ந்த நாடாக மாற்றுவதில் ஏற்றுமதி முக்கிய பங்கு வகிக்கிறது. புதிய இலக்குகளை அடைய கூட்டு முயற்சி அவசியம். – பிரதமர் மோடி* அதிகாரம், தங்களை விட்டு ஒரு நிமிடம் கூட கைவிட்டு சென்று விடக்கூடாது என்பதே பாஜவின் கொள்கை ஆகும். – கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி* அதிருப்தி எம்எல்ஏக்களின் கோரிக்கையை…

எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அதிமுக முன்னாள் அமைசர்கள் அவரது இல்லத்துக்கு வருகை

சென்னை: எடப்பாடி பழனிசாமியை சந்திக்க அதிமுக முன்னாள் அமைசர்கள், நிர்வாகிகள் அவரது இல்லத்துக்கு வருகை தந்துள்ளனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பழனிச்சாமி வீட்டுக்கு சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.சண்முகநாதன், தங்கமணி ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க உள்ளனர். Source link

இரட்டைத் தலைமையை ரத்து செய்ய கோரி 2,190 உறுப்பினர்கள் கடிதம்… கடுப்பான ஓபிஎஸ்.. பொதுக்குழு மேடையில் இருந்து வெளியேறினார்!!

சென்னை : அதிமுக பொதுக்குழுவை புறக்கணித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியேறினார்.பரபரப்பான சூழ்நிலையில் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ‘பொதுக்குழு தீர்மானங்களை பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் நிராகரித்து விட்டார்கள்.ஒற்றைத் தலைமை தீர்மானத்தோடு இணைத்து அனைத்து தீர்மானங்களும் அடுத்த கூட்டத்தில் நிறைவேற்றப்படும். ஜூலை 11ல் பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவார்,’என்றார். இதைத் தொடர்ந்து,…

அரங்கிற்குள் நுழைந்த ஓபிஎஸ்: ‘அதிமுகவின் வாரிசு, பொதுச் செயலாளர் எடப்பாடி வாழ்க’“ஓபிஎஸ் ஒழிக, துரோகி ஓபிஎஸ்” என ஆதரவாளர்கள் கோஷம்!!

சென்னை : பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தற்காலிக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் சென்னை வானகரத்தில் தொடங்கியது. ஸ்ரீவாரு மண்டபத்தில் நடக்கும் கூட்டத்தில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களைத் தவிர, ஒற்றைத் தலைமை தொடர்பான தனித் தீர்மானத்தை நிறைவேற்ற ஐகோர்ட் தடை விதித்தது. இந்த நிலையில் ஸ்ரீவாரு மண்டபத்திற்குள் ஓ பன்னீர் செல்வம் வரும் போது,…

சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் கலைஞர் பிறந்தநாள் விழா

பெரம்பூர்: புளியந்தோப்பில் சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் கலைஞரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சென்னை கிழக்கு மாவட்டம் திருவிக நகர் தெற்கு பகுதி 73வது வட்ட திமுக சார்பில் கலைஞரின் 99வது பிறந்தநாளை முன்னிட்டு `வேருக்கு விழா – 22’ என்ற நிகழ்ச்சியில் `அன்பின் நிலமானவர். அறத்தின் விதையானவர். போராளியின் புகழரங்கம்’ என்ற தலைப்பில் சென்னை புளியந்தோப்பில் நேற்று முன்தினம் மாலை மாபெறும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வட்ட செயலாளர் சுரேஷ்குமார் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி…

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சுயமாக செயல்படவில்லை அதிமுக தலைமை குறித்து இயக்குபவர் முடிவு செய்வார்: நெல்லையில் முத்தரசன் பரபரப்பு பேட்டி

நெல்லை: அதிமுக தற்போது சுயமாக செயல்படவில்லை. அதை இயக்குபவர்களே அதன் தலைமை குறித்து முடிவு செய்வார்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார். இதுதொடர்பாக நெல்லையில் அவர், அளித்த பேட்டி: அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கி நடத்தி ஆட்சி செய்தபோது மாநில நலனுக்காக ஒன்றிய அரசிடம் போராடினார். தமிழகத்திற்கு வழங்கப்பட்ட அரசு ஒதுக்கீட்டை ஒன்றிய அரசு குறைத்தபோது அதை பெறுவதற்காக அண்ணா சிலை முன் உண்ணாவிரதம் இருந்தார். அதுபோல் ஜெயலலிதா காவிரி உரிமைக்காக ஒன்றிய…

குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் திரௌபதி முர்முவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆதரிக்க வேண்டும்: பாஜக ஒன்றிய அமைச்சர் கோரிக்கை

டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி  குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும்  தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவை ஆதரிக்க வேண்டும் என பாஜக தலைவரும், ஒன்றிய அமைச்சருமான கிரிராஜ் சிங் கோரிக்கை விடுத்துள்ளார். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அதுவும் பழங்குடியினருக்கு அதிகாரம் அளிப்பது தொடர்பாக இதைவிட பெரிய உதாரணம் இருக்க முடியாது என அவர் கூறியுள்ளார். Source link

ஜனாதிபதி வேட்பாளராக பழங்குடி இன பெண்: பாஜவுக்கு ஜி.கே.வாசன் நன்றி

சென்னை: ஜனாதிபதி தேர்தலில் பழங்குடியின பெண்ணை வேட்பாளராக அறிவித்த பாஜக கூட்டணிக்கு நன்றி என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: பா.ஜ.கவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் இந்திய ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஜார்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர்  திரவுபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். அதற்காக பா.ஜ.க மற்றும் என்டிஏ  கூட்டணிக்கு வாழ்த்துகள். இவர் இந்தியாவின் இரண்டாவது பெண் ஜனாதிபதி வேட்பாளர்…

1 133 134 135 136 137 161