Browsing: அரசியல்

வரும் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு உறுதி பணம் கொடுப்பதாக மீண்டும் சொன்னால் டி.டி.வி.தினகரன் மீது வழக்கு: மாஜி அமைச்சர் கே.பி.முனுசாமி பேட்டி

வேலூர்: வரும் 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடப்பது உறுதி. பொதுக்குழு உறுப்பினர்களுக்கு பணம் கொடுப்பதாக மீண்டும் சொன்னால் டிடிவி.தினகரன் மீது வழக்கு தொடரப்படும் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறினார்.வேலூரில்  முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நேற்று வேலூர் மத்திய சிறைக்கு சென்று அப்புவை சந்தித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி வரும் 11ம் தேதி நடைபெறும். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக உறுதியாக தேர்வு செய்யப்படுவார். எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்களுக்கு பணம்…

அதிமுக ஆட்சியில் கோடநாடு வழக்கை முடிப்பதில் மட்டுமே கவனம்; உண்மை குற்றவாளியை கண்டறிய ஆர்வம் இல்லை: மருது அழகுராஜ் பரபரப்பு பேட்டி

சென்னை: அதிமுக பொதுக்குழுவில் எங்கு பார்த்தாலும் அடியாட்கள் மயமாக இருந்தது என அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த வானகரத்தில் வரும் 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவை கூட்ட எடப்பாடி தரப்பு தீவிரமாக இறங்கியுள்ளது. அதே நேரத்தில் எடப்பாடி நடத்தும் கூட்டம் சட்டப்படி செல்லுபடியாகாது என்று ஓபிஎஸ் தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான ‘நமது அம்மா’ நாளிதழின் நிறுவனர் பொறுப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் நீக்கப்பட்டது அவரது…

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை : அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. இதனால் ஜூலை 11ம் தேதி அறிவிக்கப்பட்டபடி பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது. Source link

ஓபிஎஸ் – ஈபிஎஸ் மோதல் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில், தொண்டர்கள் புடைசூழ அதிமுக அலுவலகத்திற்கு செல்லப் போவதாக சசிகலா அறிவிப்பு.

சென்னை:  அதிமுகவில் பன்னீர் செல்வம், பழனிசாமி மோதல் உச்சக்கட்டத்தில் இருக்கும் நிலையில், தலைமை செயலகத்திற்கு செல்லப் போவதாக சசிகலா அறிவித்து இருப்பது அந்த கட்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.அதிமுகவில் பதவிக்காக பன்னீரும் பழனிசாமியும் முற்றிக் கொண்டு இருக்கும் நிலையில், தாமே பொதுச் செயலாளர் எனக் கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கும் சசிகலாவும் 3ம் ஆட்டத்தில் இணைய காத்திருக்கிறார். திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் பேசிய அவர்,  ஒருவரின் சுயநலத்திற்காக உள்ளாட்சி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு…

சொல்லிட்டாங்க…

நாட்டில் அடுத்த 30 முதல் 40 ஆண்டுகள் வரை பாஜவின் சகாப்தம் தான் நிலவும். கட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சி தென் இந்தியாவில் இருந்து தொடங்கும். :- ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா.தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களை அரசு பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். :- பாமக தலைவர் அன்புமணி.ஜெயலலிதா இருந்த பொறுப்பில் அமர அரக்கர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். பணமூட்டைகளுடன் பதவியை பிடிக்க அலைந்து கொண்டிருக்கிறார்கள். :- அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன்அதிமுகவின் நலம் விரும்பி…

அதிமுக பொதுக்குழுவின் இறுதி அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு இருந்தால் ஓபிஎஸ்சை ஒற்றை ஆளாக பார்க்கும் அவசியம் ஏற்பட்டு இருக்காது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

சென்னை: அதிமுக பொதுக்குழுவின் இறுதி அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு இருந்தால், ஓ.பன்னீர்செல்வத்தை இப்படி ஒற்றை நபராக பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாக கூறினார். பாஜ மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திரவுபதி முர்மு நேற்று தமிழகம் வந்து அதிமுக, பாமக, பாஜ உள்ளிட்ட கூட்டணி கட்சி எம்பி, எம்எல்ஏக்களை சந்தித்து வாக்கு கேட்க வந்தார். இந்த நிகழ்ச்சியில், எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவு எம்எல்ஏக்கள்…

மதச்சண்டையை உருவாக்கி மக்களை பிளவுபடுத்தும் பாஜ: டி.ராஜா குற்றச்சாட்டு

திருவில்லிபுத்தூர்: இந்தியாவில் மதச்சண்டையை உருவாக்கி மக்களை பிளவுபடுத்த பாஜ முயற்சிப்பதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா குற்றம் சாட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா அளித்த பேட்டி: இந்தியாவில் பொருளாதார சிக்கல், வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலை இரு நபர்களுக்கு இடையே நடக்கும் தேர்தலாக பார்க்கக் கூடாது.…

தனக்கே தெரியாத சமூகநீதி பற்றி திமுகவிற்கு பாடம் எடுப்பதா? முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு டி.ஆர்.பாலு எம்.பி கண்டனம்

சென்னை: அதிமுகவின் முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி தனக்கே தெரியாத ‘சமூகநீதி’ பற்றி திமுகவிற்குப் பாடம் எடுத்திருப்பதற்குக் திமுக பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கடும்  கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து திமுக பொருளாளரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு வெளியிட்ட அறிக்கை: குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ள அதிமுகவின் முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி – தனக்கே தெரியாத ‘சமூகநீதி’ பற்றி திமுகவிற்குப் பாடம் எடுத்திருப்பதற்குக் கடும் கண்டனத்தைத்…

சொல்லிட்டாங்க…

* அதிமுக சட்டவிதிப்படி இன்றுவரை நான்தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். – அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்* 8 ஆண்டாக பிரதமராக பதவி வகிக்கும் மோடி வாங்கியுள்ள கடன் ரூ.82 லட்சம் கோடி. நாட்டின் மொத்த கடன் ரூ.155 லட்சம் கோடியானதுதான் மோடி அரசின் சாதனை. – கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா* 2024ல் நடைபெறும் மக்களவை தேர்தலில் பாஜவை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்திவிட்டு, மதசார்பற்ற கூட்டணி பதவியேற்க வேண்டும். – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய…

ஆதம்பாக்கத்தில் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் திமுக மூத்த முன்னோடிகள் 1600 பேருக்கு பொற்கிழி: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ வழங்கினார்

ஆலந்தூர்: காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில், கலைஞரின் 99வது பிறந்த நாள் விழா, திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டம் மற்றும் திமுக மூத்த முன்னோடிகள் 1600 பேருக்கு பொற்கிழி வழங்கும் விழா ஆதம்பாக்கம் கே.ஆர்.ஜே.கார்டனில் நேற்று இரவு நடந்தது. காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான தா.மோ.அன்பரசன் தலைமை வகித்தார். ஆலந்தூர் தெற்கு பகுதி திமுக செயலாளர் என்.சந்திரன், ஆலந்தூர் வடக்கு பகுதி திமுக செயலாளர் பி.குணாளன், மாவட்ட அவைத் தலைவர்…

1 128 129 130 131 132 161