கோயம்பேடு: ஆசையாக அழைத்தப் பெண் – சமையல் கலைஞருக்கு 4 பெண்களால் நேர்ந்த கொடூரம்! | youth complaint against 4 women in chennai
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் ரமேஷ்(27)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு திருமணமாகவில்லை. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக வடபழனியில் உள்ள விடுதியில் தங்கி சமையல் வேலை செய்து வந்தார். சொந்த ஊருக்குச் செல்ல ரமேஷ், நேற்றிரவு கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்தார். பேருந்துக்காக அவர் காத்திருந்தபோது, 35 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் ரமேஷ் அருகில் வந்தார். எங்கு செல்ல வேண்டும் என அந்தப் பெண் விசாரித்தார். அதற்கு ரமேஷ், ஊருக்குச் செல்ல காத்திருப்பதாகக் கூறியிருக்கிறார். இருவரும் பேசிக் கொண்டிருந்த…






