ஏரியா சபை இருக்கிறது… ஆனால் மக்களுக்கான அதிகாரம்?! – கேள்வியெழுப்பும் மக்கள் நல அமைப்புகள் | article about area sabha in tamilnadu
இதுகுறித்து, தன்னாட்சி அமைப்பின் இணைச் செயலரும், வழக்கறிஞருமான சிவகுமரன் கூறுகையில், “2010-ல் நகராட்சி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதில், ஏரியா சபை, வார்டு கமிட்டி கொண்டுவரப்பட்டது. இதை கொண்டுவந்த பிறகும் நடைமுறைப்படுத்தவில்லை. தற்போது திமுக அரசு வந்த பின்னர் அரசாணை பிறப்பித்து ஏரியா சபை கொண்டுவரப்பட்டுள்ளது. அரசாணை 92ன் படி, மக்கள் பங்களிப்பு இல்லாமல் டம்மியான ஏரியா சபை, வார்டு கமிட்டி அமைப்பது போன்ற ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளார்கள்.சிவகுமரன் 3 மாதத்திற்கு ஒருமுறை இக்கூட்டத்தைக் கூட்டாமல் தேவைப்படும்…









