Browsing: செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ பேட்டி: அழுத்தங்களுக்கு அடிபணிந்து விலக மாட்டேன்

28 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், MAHINDA RAJAPAKSA FB(இலங்கை, இந்திய செய்தித் தாள்கள், இணைய தளங்களில் இன்று வெளியான செய்திகளில் முக்கியமான சில செய்திகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.)நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்தும் தரப்பினரிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்கத்தயார், அதனை விடுத்து அழுத்தங்களுக்கு அடிபணிந்து பதவி விலகப் போவதில்லை என, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கட்சித் தலைவர் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக, ‘வீரகேசரி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், நாட்டின் பொருளாதார, சமூக கூட்டமைப்பில் தோற்றம் பெற்றுள்ள அடிப்படை பிரச்னைகள்…

சமைக்க வாங்கிச்சென்ற கோழி இறைச்சியில் புழுக்கள் நெளிந்ததால் பரபரப்பு – வைரலாகும் வீடியோ.. | Worm infestation in chicken meat bought for cooking

புதுச்சேரியில் வீட்டுக்கு சமைக்க வாங்கிச்சென்ற கோழி இறைச்சியில் புழுக்கள் நெளிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி அருகே முள்ளோடை- மதிகிருஷ்ணாபுரம் சாலையில் கோழி இறைச்சி கடை உள்ளது. இந்த கடையில் நேற்று காலை கன்னியக்கோவில் பகுதியை சேர்ந்த ஒருவர், வீட்டில் சமைப்பதற்காக கோழிக்கறி வாங்கிச்சென்றார். அதனை சமைக்க முயன்றபோது, இறைச்சியில் ஏராளமான புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.உடனே அந்த இறைச்சியை வாங்கிய கடைக்காரரிடமே கொண்டு சென்று காண்பித்து நியாயம் கேட்டார்.அதற்கு, கடைக்காரர், இதுவரை யாரும் எங்களிடம்…

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் தேர்வுக்குழு: மின்சார ஒழுங்குமுறை ஆணையம்

சென்னை: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் 2 உறுப்பினர் பதவிகளை நிரப்ப தேர்வுக்குழு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது: தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் தலைமைச்செயலாளர் உள்ளிட்டோரை கொண்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது, மின்சார ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர் மற்றும் உறுப்பினர் (சட்டம்) பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. http://www.tn,gov.in/department/7 என்ற இணையதளத்தில் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. Source link

சென்னை: சாவிலும் பிரியாத பாசம்… தம்பி இறந்த துக்கம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட அண்ணன்! | brothers commit suicide after one by one in Chennai

தம்பியின் சடலத்தைப் பார்த்து கதறி அழுத சேட்டு, மனமுடைந்து காணப்பட்டார். தம்பியின் இறப்பு குறித்து சேட்டு தன்னுடைய நண்பர்களிடம் குடும்பத்தினரிடமும் புலம்பியுள்ளார். அப்போது சேட்டுக்கு அவரின் நண்பர்கள், குடும்பத்தினர் ஆறுதல் கூறியுள்ளனர். ஆனாலும் மனவேதனையிலிருந்த சேட்டு, 3-ம் தேதி இரவு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தார். யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார். பின்னர் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டுக்குள் சென்ற சேட்டு நீண்ட நேரமாக வெளியில் வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டுக்குள் சென்று…

எல்ஐசி பங்குகளை வாங்குவது லாபமா, நஷ்டமா? முக்கியமான தகவல்கள்

ஆலோக் ஜோஷிமூத்த பொருளாதார பத்திரிகையாளர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்பட மூலாதாரம், LIC INDIA/BBCஇந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் அதாவது எல்ஐசி யின் தொடக்கப்பங்கு வெளியீடு (ஐபிஓ), இன்று மே 4ஆம் தேதி காலை வெளியானது. மே 9ஆம் தேதி வரை அதற்கு விண்ணப்பிக்கலாம்.எல்.ஐ.சி பாலிசி எடுக்காத அதாவது காப்பீடு பெறாத குடும்பங்கள் நம் நாட்டில் இருக்கும் வாய்ப்பு குறைவு. எல்ஐசியின் ஐபிஓ இப்போது வரப்போகிறது. இது என்ன பெரிய விஷயம் என்ற கேள்வி இப்போது எழுகிறது.இந்திய ஆயுள்…

இறந்த நாய்க்கு சிலை வைத்து தெய்வமாக வழிபடும் முதியவர்.. மானாமதுரை அருகே நெகிழ்ச்சி…

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே முதியவர் ஒருவர் தான் ஆசையாக வளர்த்த நாயின் இறப்பை தாங்க முடியாமல் அதற்கு சிலை வடித்து வாரம்தோறும் பூஜை செய்துவருவதும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே பிரமானக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த முதியவர் முத்து. இவர் சமூக நலத்துறையில் தன் பணியை முடித்துவிட்டு ஓய்வு பெற்றவர். செல்லப்பிராணியாக நாய் ஒன்றுக்கு ஷாம்குமார் என பெயரிட்டு கிட்டதட்ட கடந்த 11 ஆண்டுகளாக மிக பாசமாக வளர்த்து வந்தள்ளார்.ஒரு நாள் உடல்நலக்குறைவால் நாய் இறந்து…

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக நிகோலஸ் பூரன் நியமனம்

டெல்லி: வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக நிகோலஸ் பூரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொல்லார்ட் ஓய்வு பெற்ற நிலையில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டனாக பூரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். Source link

ம.பி: பசுவைக் கொன்றதாக சந்தேகம்… பழங்குடியினர் இருவர் அடித்துக்கொலை! | 2 Tribals Accused Of Killing Cow Beaten To Death In Madhya Pradesh

மத்தியப் பிரதேச மாநிலம், சியோனி மாவட்டத்தில் பசுவைக் கொன்றதாக சந்தேகத்தின் பேரில் இரண்டு பழங்குடியினர் அடித்துக்கொல்லப்பட்டனர். 20 பேர் கொண்ட குழு , பழங்குடியினரின் வீட்டுக்குச் சென்று, பசுவைக் கொன்றதாகக் குற்றம்சாட்டி அவர்களை மிகக் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் இறந்து விட்டதாக போலீஸார் தெரிவிக்கிறார்கள். ஆனால், உயிரிழந்த பட்டியலினத்தவர்கள் பசுவைக் கொன்றார்களா என்பது குறித்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் ஏதும் இல்லை.இந்த நிலையில், இந்தச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை…

தமிழகம் வந்த இலங்கை தமிழர்கள்: “கைக்குழந்தைக்கு மருந்துகூட வாங்க முடியவில்லை”

பிரபுராவ் ஆனந்த் பிபிசி தமிழுக்காக33 நிமிடங்களுக்கு முன்னர்இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக உணவு, அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் மற்றும் மருந்து தட்டுப்பாட்டால் இலங்கையில் இருந்து இதுவரை 75 இலங்கை தமிழர்கள் தமிழகத்திற்கு வந்து மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுள்ள நிலையில், திங்கள் கிழமை அதிகாலை 2 மாத கை குழந்தையுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 5 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வந்துள்ளனர்.ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு யாழ்ப்பாணம் மாவட்டம் நெடுந்தீவு கடற்கரையில் இருந்து ஒரு…

2022-ம் ஆண்டில் 93% இந்தியர்கள் சுற்றுலா செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர் : ஆய்வில் தகவல்

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, கனடா, மெக்சிகோ, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட ஏழு நாடுகளைச் சேர்ந்த 3,000 பயணிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. Source link