Browsing: செய்திகள்

சென்னையில் நாளை பாமக சிறப்பு பொதுக்குழு அன்புமணியை தலைவராக அறிவிக்க திட்டம்

சென்னை: பாமகவின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் 28ம் தேதி (நாளை) காலை 11 மணியளவில் சென்னையை அடுத்த திருவேற்காட்டில் நடக்கிறது. கூட்டத்திற்கு பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமை வகிக்கிறார். பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். இதில் அன்புமணி கட்சியின் மாநில தலைவராக அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய தலைவர் ஜி.கே.மணியும் ஆதரவு தெரிவித்துள்ளாராம். ஜி.கே. மணிக்கு ஆலோசகர் பதவி வழங்கப்படலாம் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. Source link

கடன் வழங்குவதில் விதிமீறல்; 5 நிதி நிறுவனங்களின் பதிவு ரத்து – ரிசர்வ் வங்கி அதிரடி

வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் அதிக அளவில் உருவாகிவரும் நிலையில் கடன் வழங்குவதில் விதிமிறைகளை மீறி செயல்பட்டதற்காக 5 நிறுவனங்களின் பதிவை ரத்து செய்துள்ளது ரிசர்வ் வங்கி.ரிசர்வ் வங்கி ரூபாய் மதிப்பை நிர்வகிப்பது, பணப்புழக்கத்தை தீர்மானிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் பங்களிக்கும் முக்கிய அமைப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல் நிதி சார் துறை நிறுவனங்களைக் கண்காணிக்கும் அமைப்பாகவும் உள்ளது.ரிசர்வ் வங்கிஅந்த வகையில் முதலீட்டாளர்கள், பொது மக்களின் நலன் கருதி தொடர்ந்து நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது. தற்போது யுஎம்பி…

ஞானவாபி மசூதி: இந்த விவகாரம் சர்ச்சையாக மாறுவதை நீதிமன்றத்தால் தடுத்திருக்க முடியுமா?

வினீத் கரேபிபிசி செய்தியாளர், டெல்லி12 நிமிடங்களுக்கு முன்னர்படக்குறிப்பு, ஞானவாபி மசூதிசுமார் 31 ஆண்டுகளுக்கு முன்பு, 1991-ல் காங்கிரஸ் கட்சியின் பி.வி.நரசிம்மராவ் அரசு வழிபாட்டுத் தல மசோதாவை (சிறப்பு விதிகள்) கொண்டு வந்தபோது, நாட்டில் ராமர் கோயில் இயக்கம் உச்சத்தில் இருந்தது.1947 ஆகஸ்ட் 15-ம் தேதி மதம் சார்ந்த ஒரு இடத்தின் நிலை எப்படி இருந்ததோ, அதற்குப் பிறகும் அது அப்படியே பராமரிக்கப்படும் என்றும், அதன் தன்மையும், இயல்பும் மாறாது என்றும் அதே ஆண்டில் இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தில்…

Headlines Today : 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – தலைப்புச் செய்திகள் (மே 26-2022)

31,400 கோடி ரூபாய் மதிப்பிலான 11 மக்கள் நலத் திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார்.வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல்லில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு. சி.வி.சண்முகம், ஆர். தர்மர் ஆகியோர் போட்டியிடுவதாக கட்சி தலைமை அறிவிப்பு.பால் கொள்முதல் விலையை உயர்த்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசித்து…

3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை காவலர் வீரமரணம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் நஜிபாத் சந்திப்பு சோதனை சாவடி பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருந்தனர். அந்த இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்ததும், அவர்களின் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு வீரர்கள் கொடுத்த பதிலடியில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சண்டையின்போது, போலீஸ்காரர் ஒருவர் வீர மரணமடைந்தார். கொல்லப்பட்ட தீவிரவாதிகள் அனைவரும், பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ் இ முகமது அமைப்பை சேர்ந்தவர்கள். Source link

போலீஸிடம் போன்கேட்டு வாக்குவாதம்; கைவிலங்கால் வேன் கண்ணாடியை உடைத்த விசாரணைக் கைதி! | The interrogation prisoner had a dispute with the police

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் கடற்கரைக்கு கடந்த மார்ச் மாதம் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி தன் காதலனுடன் வந்துள்ளார். அவரை அங்கு கஞ்சா போதையில் இருந்த கமுதி வேப்பங்குளத்தை சேர்ந்த பத்மேஷ்வரன், நத்தகுளத்தை சேர்ந்த தினேஷ்குமார் , பசும்பொன்ன சேர்ந்த அஜித்குமார் ஆகியோர் காதலன் கண்முன்னே கல்லூரி மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.இதுகுறித்து விருதுநகர் அனைத்து மகளிலர் நீதிமன்ற உத்தரவுப்படி ராமநாதபுரம் எஸ்.பி தலைமையிலான தனிப்படையினர் குற்றவாளிகள் மூன்று பேரையும்…

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை: டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு

7 நிமிடங்களுக்கு முன்னர்பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, யாசின் மாலிக்இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிரிவினைவாத இயக்கமான ‘ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி’ தலைவர் யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது. தீவிரவாதம் தொடர்பான வழக்கில் அவர் குற்றவாளி என கடந்த 19-ம் தேதி டெல்லி என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அவருக்கான தண்டனையை நீதிபதி பிரவீன் சிங் இன்று அறிவித்தார். தீவிரவாதத்துக்கு நிதி அளித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி தேசிய புலனாய்வு…

Breaking News : காங்கிரஸ் கட்சியில் இருந்து கபில் சிபில் விலகல்

பிரதமர் மோடி மே,26-ல் சென்னை வருகை..! பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் பயணமாக நாளை ( மே, 26)  தமிழகம் வருகிறார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளும் பிரதமர் மோடி, தேசிய நெடுஞ்சாலை துறையின் திட்டங்கள், ரயில்வே துறையின் புதிய திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார். Source link

சிந்தாதிரிப்பேட்டையில் பாஜக நிர்வாகி பாலச்சந்தர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 ரவுடிகள் மீது வழக்குப்பதிவு

சென்னை : சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பாஜக நிர்வாகி பாலச்சந்தர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 ரவுடிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாலச்சந்தரின் சகோதரி ஷர்மிளா அளித்த புகாரின் பேரில் ரவுடிகளான பிரதீப், சகோதரர் சஞ்சய், கலைவாணன் ஆகியோர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிந்தாதிரிப்பேட்டை தனிப்படை போலீசார் தலைமறைவாக உள்ள 3 ரவுடிகளையும் தீவிரமாக தேடி வருகின்றனர். Source link

போலீஸ் பாதுகாப்பையும் மீறி பாஜக பிரமுகர் வெட்டிப் படுகொலை! – சென்னையில் பயங்கரம் | bjp cadre murdered in chennai chindadhiripet police investigation goes on

இன்று இரவு எட்டு மணியளவில், சிந்தாதிரிப்பேட்டை சாமி நாயக்கன் தெருவில், மத்திய சென்னை பா.ஜ.க பட்டியலினப் பிரிவு தலைவர் பாலசந்தர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல், தாங்கள் மறைந்துவைத்திருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் பாலசந்தரை சரமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டு, அங்கிருந்து தப்பித்து ஓடியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், அவரின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.கொலை…

1 442 443 444 445 446 457