பாலத்தீனம்: இஸ்ரேல் குண்டுவீச்சுக்கு நடுவே உயிர் தப்ப போராடும் மக்கள் – காஸாவில் என்ன நடக்கிறது?
பட மூலாதாரம், Anadolu via Getty Imagesகட்டுரை தகவல்இஸ்ரேலிய ராணுவம் காஸா நகரை கட்டுப்பாட்டில் எடுக்கும் நோக்கில் தரை வழியில் பெரிய அளவிலான தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற முயற்சிக்கின்றன.காஸா நகரின் ஷேக் ரத்வான் பகுதியைச் சேர்ந்த, மூன்று குழந்தைகளின் தாயான 32 வயது லினா அல்-மக்ரெபி, ஆபத்து இருந்தும் வீட்டை விட்டு வெளியேறாமல் இருந்தார். ஆனால், ஒரு இஸ்ரேல் அதிகாரி தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனே வெளியேறுமாறு உத்தரவிட்டதால் அவர்…









