எண்ணூரில் 9 அசாம் தொழிலாளர்கள் உயிரிழப்பில் என்ன நடந்தது? பிபிசி தமிழ் களஆய்வு
கட்டுரை தகவல்”சுமார் 130 அடி உயரத்தில் வேலை என்பதால் பத்து பேரும் பாதுகாப்பு பெல்ட் அணிந்திருந்தனர். இரும்புக் குழாய்களைக் கொண்டு மேற்கூரை அமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருந்தன. மாலை நேரம் என்பதால் வேலை முடிந்து கிளம்ப தயாராக இருந்தோம். திடீரென மேற்கூரை சரிந்தது” எனக் கூறி அழுகிறார், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹித்தீஷ்.எண்ணூர் அனல்மின் நிலையத்தில் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் இறந்த ஒன்பது பேரில் ஒருவரான திமராஜ் துசன் என்பவரின் சகோதரர் இவர்.பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாக…









