சென்னை: சாவிலும் பிரியாத பாசம்… தம்பி இறந்த துக்கம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்ட அண்ணன்! | brothers commit suicide after one by one in Chennai
தம்பியின் சடலத்தைப் பார்த்து கதறி அழுத சேட்டு, மனமுடைந்து காணப்பட்டார். தம்பியின் இறப்பு குறித்து சேட்டு தன்னுடைய நண்பர்களிடம் குடும்பத்தினரிடமும் புலம்பியுள்ளார். அப்போது சேட்டுக்கு அவரின் நண்பர்கள், குடும்பத்தினர் ஆறுதல் கூறியுள்ளனர். ஆனாலும் மனவேதனையிலிருந்த சேட்டு, 3-ம் தேதி இரவு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தார். யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார். பின்னர் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டுக்குள் சென்ற சேட்டு நீண்ட நேரமாக வெளியில் வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள் வீட்டுக்குள் சென்று…









