சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக என்.மாலா,எஸ்.சௌந்தர் பதவியேற்பு
சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக என்.மாலா மற்றும் எஸ். சௌந்தர் ஆகியோர் பதவியேற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி முனிஷ்வர்நாத் பண்டாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள காலிபணியிடங்கள் எண்ணிக்கையை நிரப்பும் வகையில் ஆறு வழக்கறிஞர்களை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரைத்தது. ஆறு பேரில் என்.மாலா மற்றும் எஸ். சௌந்தர் ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார்.இதனையடுத்து உயர் நீதிமன்ற வளாகத்தில் இன்று…









