வீட்டில் மணக்கும் பிரசாதம்: சப்டாபூரி
வீட்டில் எவ்வளவுதான் ருசியாகச் சமைத்தாலும் கோயிலில் தரப்படும் பிரசாதத்துக்குத் தனிச்சுவை உண்டு. சிறியதே அழகு என்பதுபோல் கொஞ்சமாகத் தரப்படுவதாலோ என்னவோ அதன் சுவை ஈடு இணையில்லாததாக இருக்கும். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு பிரசாதம் பிரசித்தமாக இருக்கும். வட இந்தியாவில் பூரி ஜெகநாதர் கோயிலுக்கும் அப்படிப் பிரசித்தமான பிரசாதங்கள் நிறைய உண்டு. அங்கே தினமும் 100 வகையான நைவேத்யங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆறு கால பூஜையின்போது அவை படையலிடப்படு கின்றன. ஜெகநாதரைத் தரிசித்த தோடு அங்கு படையலிடப்படும் நிவேதனங்களின் செய்முறை…









