Author Admin

US Supreme Court தீர்ப்பு: ட்ரம்பின் பரஸ்பர வரி செல்லாது|US Supreme Court Blocks Trump’s Tariff Bombshell

உலக நாடுகளையே ஆட்டிப் படைத்த அஸ்திரம் அமெரிக்க அதிபர்‌ ட்ரம்பின் “பரஸ்பர வரி’. இந்த வரிகளை அவர் அமெரிக்காவின் ‘சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977 (IEEPA)’-ன் கீழ் அமலுக்கு கொண்டு வந்தார்.இதில் உலக நாடுகளின் அதிருப்தியை தாண்டி, உள்நாட்டிலும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. இது அமெரிக்க வர்த்தகத்தையும், பொருளாதாரத்தையும் பாதிக்கும் என்று நீதிமன்ற படிகளில் அவர்கள் ஏறினர்.’ட்ரம்ப் விதித்த வரி செல்லாது’ என்று அமெரிக்காவின் ஃபெடரல் நீதிமன்றம் முன்பே தீர்ப்பளித்திருந்தது.இந்தத் தீர்ப்பை எதிர்த்து அமெரிக்க…

T20 WC: 2024-ல் தகுதி கூட பெறாத ஜிம்பாப்வே இன்று உலக சாம்பியன்களை அதிரவைத்தது எப்படி? 30 ஆண்டு வரலாறு

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்நடந்து கொண்டிருக்கும் டி20 உலகக் கோப்பையில் அநேக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் அணி ஜிம்பாப்வே. யாரும் எதிர்பாராத வகையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய அந்த அணி, பின்னர் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. வியாழக்கிழமை நடந்த கடைசி லீக் சுற்றுப் போட்டியில் இலங்கையையும் வீழ்த்தி பி பிரிவில் முதலிடம் பெற்று அசத்தியிருக்கிறது அந்த அணி.2024 டி20 உலகக் கோப்பையில் 20 அணிகள் பங்கேற்றபோதும் ஜிம்பாப்வே அணியால் அதற்குத் தகுதி பெற முடியவில்லை. அப்படி…

SL vs ZIM: “தோல்வியே இல்லாமல் சூப்பர் 8-க்கு வந்தது பெருமையாக இருக்கிறது”- சிக்கந்தர் ராசா | Zimbabwe Sikandar Raza sl vs zim post match speech

டி20 உலகக்கோப்பையின் நேற்றைய போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்பே அணி வெற்றி பெற்றிருக்கிறது.சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. இந்த வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜிம்பாப்பே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராசா, “நாங்கள் எதிர்காலத்தை நோக்கி கவனத்தைச் செலுத்துகிறோம். கடந்த இரண்டு வாரங்களில் எங்கள் வீரர்கள் காட்டிய முயற்சி மிகப்பெரியது. ஜிம்பாப்பே அணிஎங்களால் இன்னும் சிறப்பாக விளையாட முடியும். நாங்கள் இந்த இடத்திற்கு வருவோம் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.…

பிரியாணி பில்களால் வெளிச்சத்திற்கு வந்த ரூ.70,000 கோடி வரிஏய்ப்பு! | How AI cracked a ₹70,000 crore tax evasion trail in Hyderabad’s biryani chain

நாடு முழுவதும் உணவக உரிமையாளர்கள் பில்களில் மோசடி செய்து ரூ.70 ஆயிரம் கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்ததை, சமீபத்தில் வருமான வரித்துறை கண்டுபிடித்து இருக்கிறது. இதையடுத்து மேற்கொண்டு அனைத்து உணவகங்கள், அவற்றின் விற்பனை பில்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.ஹைதராபாத் உணவகத்தால் வெளிவந்த அதிர்ச்சி!உணவக உரிமையாளர்களின் இந்த மோசடி, ஹைதராபாத் பிரியாணி கடை ஒன்றின் மூலம் வெளிச்சத்திற்கு வந்தது. ஹைதராபாத்தைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் வழக்கமான சோதனைக்காக அங்குள்ள பிரபல பிரியாணி கடைக்குச் சென்றனர். கடையில் இருந்த…

வங்கதேசம்: தாரிக் ரஹ்மானிடம் தாராளம் காட்டும் இந்தியா, முகமது யூனுஸிடம் கசப்பாக நடந்துகொண்டது ஏன்?

பட மூலாதாரம், @trahmanbnpபடக்குறிப்பு, தாரிக் ரஹ்மான் மற்றும் முகமது யூனுஸ்கட்டுரை தகவல்முகமது யூனுஸ் வங்கதேசத்தின் தென்கிழக்கு கடற்கரையில் உள்ள துறைமுக நகரமான சிட்டகாங்கில் வளர்ந்தார். அவரது தந்தைக்குப் பிறந்த ஒன்பது குழந்தைகளில் அவர் மூன்றாவது குழந்தை.யூனுஸ் பாய் ஸ்கவுட்ஸில் தீவிரமாக இருந்தார். மேலும் வளரிளம் பருவத்தினராக இருந்தபோது சர்வதேச நிகழ்வுகளில் பங்கேற்க ஜப்பான், அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளுக்குச் சென்றார்.வாண்டர்பில்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க ஃபுல்பிரைட் உதவித்தொகையைப் பெற்றார். அங்கு அவர் 1971இல் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம்…

ஒரே இரவுக்குள் ஓகே ஆன கூட்டணி பேரம் – திமுக முகாமில் தேமுதிக இணைந்தது எப்படி?

தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தை ஆரம்பித்த விஜயகாந்த், அ.தி.மு.கவுடன் ஒருமுறை கூட்டணி அமைத்தார். அதன் பிறகு அந்தக் கட்சியின் தலைமையில் மக்கள் நலக் கூட்டணி 2016-ம் ஆண்டு தேர்தலைச் சந்தித்து. பின்னர் பா.ஜ.க, அ.தி.மு.க என கூட்டணிகளை மாற்றினாலும் தே.மு.தி.க இதுவரை தி.மு.க-வுடன் கூட்டணி அமைக்கவில்லை.இந்தச் சூழலில்தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணியில் தே.மு.தி.க-வைக் கொண்டுவந்து, அந்தக் கட்சிக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகள் கொடுக்க கடுமையாக முயற்சிகள் நடந்தன. இரட்டை இலக்க தொகுதிக்கு…

ரஞ்சி கோப்பை: மைதானம் இல்ல; போதிய வசதிகள் இல்ல, ஆனாலும்!- ஃபைனலில் J&K அணி; இலக்கை அடைந்தது எப்படி?

​“நாங்க சும்மா விளையாட வரல… ஜெயிக்க வந்திருக்கோம்!” – 70 ஆண்டுக்கால ஏமாற்றத்தை ஒரு ஓரமாக ஒதுக்கிவிட்டு, ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இந்திய கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது ஜம்மு-காஷ்மீர் அணி.2014-ல் விழுந்த விதை!அது 2014-ம் ஆண்டு. மும்பை வான்கடே மைதானம். 40 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்கும், கத்துக்குட்டி அணியாகப் பார்க்கப்பட்ட ஜம்மு-காஷ்மீருக்கும் மோதல். சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயஸ் ஐயர், ஷர்துல் தாக்கூர் என நட்சத்திர பட்டாளமே மும்பை அணியில்…

வங்கதேசம்: கலிலூர் ரஹ்மான் வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டதில் பிஎன்பி கட்சியினரே வியப்படைவது ஏன்?

பட மூலாதாரம், Former CA press wingபடக்குறிப்பு, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றிய கலிலூர் ரஹ்மான், தற்போது பிஎன்பி அரசாங்கத்தில் வெளியுறவு அமைச்சராக உள்ளார்.கட்டுரை தகவல்வங்கதேசத்தில் சமீபத்தில் விடைபெற்ற இடைக்கால அரசாங்கத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பை வகித்த கலிலூர் ரஹ்மானை, புதிய பிஎன்பி அரசாங்கம் வெளியுறவு அமைச்சராக நியமித்துள்ளது.இந்த முடிவால் பிஎன்பி தலைவர்களும் தொண்டர்களும் கூட வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.எதிர்க்கட்சிகளும் இதனை விமர்சித்துள்ளன.ரஹ்மானை வெளியுறவு அமைச்சராக நியமித்த முடிவு தங்களுக்கு சங்கடத்தையும்…

‘இலங்கையை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம்!’ – இந்தியாவுக்கு எதிராக கெத்தாக களமிறங்கப் போகும் ஜிம்பாப்வே! |“After Defeating Sri Lanka, Tops the Points Table! – Confident Zimbabwe Set to Face India

சேஸிங்கை தொடங்கிய ஜிம்பாப்வே அணிக்கு அதன் ஓப்பனர்களான பிரையன் பென்னர்ட் மருமணி ஆகியோர் இணைந்து 69 ரன்களை சேர்த்தனர். மருமணியை வெல்லாலகே வீழ்த்த நம்பர் 3 இல் ரியான் பர்ல் அதிரடியாக 12 பந்துகளில் 23 ரன்களை சேர்த்திருந்தார். நம்பர் 4 இல் சிக்கந்தர் ராசா அதிரடியாக ஆடி 26 பந்துகளில் 45 ரன்களை சேர்த்து வெற்றியை உறுதி செய்தார். ஜிம்பாப்வே இடம்பெற்றிருந்த க்ரூப் B இல் தான் ஆஸ்திரேலியாவும் இருந்தது. உலகக்கோப்பையை நடத்தும் இலங்கையும் இருந்தது.…

தேர்தல் நெருக்கடியில் தொடரும் போராட்டங்கள்: `சதியா… உரிமையா?' – பரபரக்கும் தமிழ்நாட்டின் களம்!

போராட்டமும் – விவாதமும்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசு ஊழியர்கள் தொடங்கி, அங்கன்வாடி ஊழியர்கள் வரை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் சிலப் போராட்டங்கள் தற்காலிகமாக முடிவுக்கு வந்தாலும் சிலப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. இதற்கிடையில், ஆளும் அரசின் மீது தவறான பிம்பத்தைக் கட்டமைக்க இந்தப் போராட்டங்கள் திட்டமிட்டுச் செய்யப்படுகின்றன என சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்தது. மற்றொருபுறம், தேர்தலுக்கு முன்பே கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதின் அடிப்படையிலேயே இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக விவாதங்களில் பதிலளிக்கப்படுகிறது.செவிலியர்கள் போராட்டம்எனவே,…

1 6 7 8 9 10 1,439