சென்னை சூப்பர் கிங்ஸ்:
சிஎஸ்கே அணியில் டுவைன் பிராவோ, ஆடம் மில்னே, கே.எம்.ஆசிஃப், ஹரி நிஷாந்த், பகத் வர்மா, ராபின் உத்தப்பா, ஜெகதீசன், கிறிஸ் ஜோர்டான் போன்ற வீரர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர். 20.25 கோடி ரூபாய் கையில் வைத்திருக்கிறார்கள். சிஎஸ்கேயால் ஏழு இடங்களில் 5 இந்திய வீரர்கள், 2 வெளிநாட்டு வீரர்கள் எடுக்க முடியும். அணியில் பிரச்சினையாக இருப்பது நம்பர் 3 பேட்டர் மற்றும் ஆல்ரவுண்டர் இடம்தான். கடந்த சீசனில் சின்ன தல சுரேஷ் ரெய்னா இல்லாத இடத்தை ராபின் உத்தப்பாவால் நிரப்ப இயலவில்லை. கேன் வில்லியம்சன், ரூட், ஹாரி ப்ரூக் யாரேனும் ஒருவரை இந்த இடத்திற்கு எடுக்க வாய்ப்பிருக்கிறது. டெத் ஓவரில் சிஎஸ்கேவுக்கு பலமாக ஆடிக்கொடுத்த ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ இடத்திற்கு இன்பார்ம் ஆல் ரவுண்டர் சாம் கரண், வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரொமாரியோ ஷெப்பர்ட் இருவரையும் எடுக்க முயற்சிப்பார்கள்.
மும்பை இந்தியன்ஸ்:
கீரன் பொல்லார்ட், அன்மோல்பிரீத் சிங், ஆர்யன் ஜூயல், பசில் தம்பி, டேனியல் சாம்ஸ், ஃபேபியன் ஆலன், ஜெய்தேவ் உனத்கட்,மயங்க் மார்கண்டே, முருகன் அஸ்வின்டைமல் மில்ஸ் போன்ற வீரர்களை விடுவித்திருந்தனர். 20.55 கோடி ரூபாய் கையில் வைத்திருக்கிறார்கள்.
மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை கீரன் பொல்லார்ட் க்கு மாற்றாக ஆல் ரவுண்டரை தேர்ந்தெடுக்க தான் அதிக போட்டி இருக்கும். டிம் டேவிட் இருந்தாலும் வெஸ்ட் இண்டீஸை சேர்ந்த அனுபவ வீரர் ஹோல்டரை எடுக்க வாய்ப்பு இருக்கிறது. அணியின் பேக்கப்புக்கு இந்தியன் லெக் ஸ்பின்னர், வேகப்பந்து விச்சாளர்கள் தேவையாக இருக்கிறது. ஷாகிப் அல் ஹசன், முகமது நபி அல்லது இளம் இந்திய ஸ்பின்னர்கள் பக்கம் மும்பை அணி போகக்கூடும்.