கால்பந்து உலகம்: 1950களில் இந்தியாவை கலக்கிய விம்கோ கிளப் – வியப்பூட்டும் வரலாறு

Share

விம்கோ ஃபுட்பால் கிளப்

இந்தியாவில் 1950 மற்றும் 60களில் மிகவும் பிரபலமான அணியாக இருந்தது விம்கோ கால்பந்து கிளப் அணி. யாராலும் வெல்ல முடியாத அணியாகத் திகழ்ந்த இந்த அணி அந்த காலகட்டத்தில் தொடர்ந்து சாம்பியன்ஷிப்களை வென்றது. ஆனால், அந்த அணியை உருவாக்கிய தீப்பெட்டி தொழிற்சாலை மூடப்பட்டதும் அந்த கிளப்பும் மூடப்பட்டு விட்டது.



“விம்கோ அணியில் நான் சேர்ந்த போது அவர்கள் வெல்லாத அணியே கிடையாது. அவர்கள் பெறாத கோப்பைகளே இல்லை. எல்லா தொடரிலும் முன்னணி அணியாக இருந்தனர். நான் பார்க்கும் போது கிட்டத்தட்ட நூறு கோப்பைகள் அவர்களிடம் இருந்தன. துரதிருஷ்டவசமாக அதையெல்லாம் புகைப்படம் எடுக்கவில்லையே என்று இப்போது நான் வருந்துகிறேன்” என்கிறார் தற்போது கோவையில் வசித்து வரும் விம்கோ கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் வில்லியம்ஸ்.



இந்திய அணிக்கான மிகவும் திறமை வாய்ந்த பல வீரர்களை விம்கோ அணி உருவாக்கியுள்ளது. அந்த காலகட்டத்தில் இந்திய அணியில் இடம்பிடித்திருந்த பல வீரர்கள் விம்கோ அணியைச் சேர்ந்தவர்கள்.

படக்குறிப்பு,

முன்னாள் கேப்டன் வில்லியம்ஸ்

“விம்கோ என்பது ஸ்வீடன் நாட்டு நிறுவனம். வெறும் நிறுவனமாக மட்டுமல்லாமல் விளையாட்டு உட்பட தங்கள் பகுதியைச் சுற்றியிருந்த மக்களின் வாழ்வாதாரத்திற்கு அந்த நிறுவனம் முக்கியத்துவம் கொடுத்தது. இது, 1920 முதல் 90 காலகட்டம் வரை பல வீரர்களை உருவாக்கிய நிறுவனம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com