வரும் 2025-ம் ஆண்டுக்குள் புகைப்பிடிக்காத நாடாக நியூசிலாந்தை மாற்ற, 14 வயதுக்குட்பட்டவர்கள் சிகரெட் வாங்குவதற்குத் தடைவிதித்து புதிய சட்டத்தை அந்த நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது. அடுத்த தலைமுறையைப் புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து தடுக்கும் சட்டமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சட்டத்தின்படி, 14 வயதுக்குக் கீழ் உள்ளவர்களால் சிகரெட் வாங்க முடியாது. இது குறித்து அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் அயேஷா வெர்ரால் கூறுகையில், “ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட காலம் வாழ்வார்கள், ஆரோக்கியமாக வாழ்வார்கள். பல வகையான புற்றுநோய்கள், மாரடைப்புகள், பக்கவாதம் போன்ற புகைப்பிடிப்பதால் உண்டாகும் எண்ணற்ற நோய்களைக் குணப்படுத்தத் தேவையான 5 பில்லியன் அமெரிக்க டாலர் சேமிக்கப்படும்.