ராமேஸ்வரம்- தனுஷ்கோடி புதிய ரயில் பாதையால் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆபத்தா?

Share

தனுஷ்கோடி

ராமேஸ்வரம்- தனுஷ்கோடி இடையே கடற்கரைக்கு அருகில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த புதிய ரயில் பாதையால் பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆபத்து ஏற்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.



100 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் இந்தியாவின் முக்கிய கேந்திரமாகவும், இந்தியாவின் தென் கடலோர வணிக மையமாகவும் விளங்கிய துறைமுக நகரம் தனுஷ்கோடி. ஒரு நாள் புயலில் அந்தப் பெருமை முழுவதும் மண்ணோடு மண்ணானது.



1964 டிசம்பர் 17-ல் காற்றழுத்த தாழ்வு நிலை அந்தமான் கடல் பகுதியில் உருவானது. அது புயலாக மாறி டிசம்பர் 23-ல் தனுஷ்கோடியை தாக்கியதில் கடல் பொங்கி, பேரலை வீசி ஆயிரக்கணக்காணோர் உயிரிழந்தனர்.



சென்னையில் இருந்து தனுஷ்கோடி வந்த ரயிலில் இருந்த பயணிகள் அனைவரும் இயற்கையின் இந்த சீற்றத்தில் உயிரிழந்தனர். ரயிலில் ஆடல் பாடலுடன் சுற்றுலா வந்த மருத்துவ கல்லூரி மாணவிகளும் இதில் அடங்கும்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com