டி20 உலகக் கோப்பை: இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா போட்டிகளில் நடக்கப் போகும் ‘ட்விஸ்ட்’ என்ன?

Share

டி20 உலகக்கோப்பை

பட மூலாதாரம், Getty Images

ஞாயிற்றுக் கிழமையன்று டி20 உலகக் கோப்பை குரூப்-2 பிரிவில் மூன்று போட்டிகள் நடக்க இருக்கின்றன. இந்த மூன்று போட்டிகளுமே அரையிறுதிக்குச் செல்லும் அணிகளைத் தீர்மானிக்க இருக்கின்றன.

இந்தப் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வங்கதேசம், ஜிம்பாப்வே ஆகிய 5 அணிகளுக்கும் அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பு இருப்பதால் இந்தப் போட்டிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

இந்தப் பிரிவில் இருக்கும் 6 அணிகளுக்குமே இவை தங்களது கடைசிப் போட்டிகளாக இருக்கும். வெற்றி தோல்விகள் மாத்திரமல்லாமல் மழையால் ஆட்டங்கள் ரத்தாவதும்கூட அணிகளின் அரையிறுதி வாய்ப்பை பாதிக்கும்.

தென்னாப்பிரிக்க அணி நெதர்லாந்து அணியையும், பாகிஸ்தான் அணி வங்கதேசத்தையும், இந்திய அணி ஜிம்பாப்வே அணியையும் சந்திக்கின்றன. அரையிறுதிக்குச் செல்ல வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நான்கு அணிகளுமே தத்தமது போட்டிகளில் வென்றுவிடப் போராடும் என்பதால் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் மூன்று போட்டிகளுமே பரபரப்பாக இருக்கப் போகின்றன.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com