நுனி முதல் அடி வரை பயன்பாடு : காய்கறிகளில் அனைத்துப் பகுதிகளையும் பயன்பத்திக் கொள்ளும் சாதூர்யத்தை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். வேர்கள், தண்டுகள், கீரைகள், மலர்கள், மொட்டுகள் என அனைத்தையும் பச்சையாகவோ அல்லது சமைத்தோ சாப்பிடும் பாரம்பரியம் நம் உணவுக் கலாச்சாரத்தில் அடங்கியுள்ளது. அதேபோன்று ஊறுகாய் செய்வது, வத்தல் போடுவது, காய வைத்து பதப்படுத்துவது என பல்வேறு உத்திகளை நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். மேற்குறிப்பிட்ட வகையில், அனைத்து பாகங்களையும் உணவுப் பொருளாக மாற்றுவது அல்லது அதனை பதப்படுத்தி பிற்கால பயன்பாட்டிற்கு வைத்துக் கொள்வது என இந்த இரண்டு உத்திகளை பயன்படுத்தினாலே நம் சமையல் அறைகள் கழிவு இல்லாத ஒன்றாக மாறும்.
கழிவுகள் இல்லா சமையலறை… நிலையான எதிர்காலத்திற்கு தேவையான டிப்ஸ்!
Share