ராகுலின் பாத யாத்திரை: தமிழ்நாடு, கேரளா, இப்போது கர்நாடாவில் – வரவேற்பு எப்படி?

Share

  • அஷ்ரஃப் படானா
  • பிபிசி ஹிந்திக்காக

ராகுல் நடைப்பயணம்

பட மூலாதாரம், @INCINDIA

ராகுல் காந்தியின் நாடு தழுவிய பாத யாத்திரையின் தாக்கம், இந்திய தென் மாநிலங்களில் அதிகமாகவே தெரிகிறது.

செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்தப் பயணத்தில், ராகுல் காந்தி தினமும் 20 முதல் 25 கிலோ மீட்டர் பயணம் செய்வது மட்டுமின்றி சமூகத்தின் பல்வேறு தரப்பினருடனும் உரையாடி வருகிறார்.

செப்டம்பர் 30ஆம் தேதி கேரள எல்லையைத் தாண்டி கர்நாடகாவுக்கு வந்துள்ள ராகுல் காந்தி அங்கு 21 நாட்கள் பயணம் மேற்கொள்கிறார். கர்நாடகாவில் 7 மாவட்டங்களில் 500 கி.மீ.க்கு மேல் பயணம் செய்த அவர் அடுத்தகட்டமாக தெலங்கானாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.

கேரளாவில், இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜெய்சங்கருக்கும், கொச்சியில் ராகுல் காந்தியுடன் மதிய உணவருந்த அழைப்பு வந்தது. செப்டம்பர் 7 ஆம் தேதி, தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து ராகுல் காந்தி தனது நடைப்பயணத்தை மேற்கொண்டார். 300 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து கொச்சியை அடைந்தார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com