எந்தளவுக்குத் தொழில்நுட்பங்கள் வளர்கிறதோ, அந்தளவிற்கு நூதன முறையில் திருட்டுகளும் அதிகரித்துள்ளது. அந்தத் தவறுகளைக் கண்டறியத் தொழில் நுட்பத்தையே ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டிய யுக்திகளைக் காவல் துறையினர் கையாள வேண்டியிருக்கிறது.
இந்நிலையில், 100 ரூபாய் paytm பணப்பரிவர்த்தனை மூலம், டெல்லியில் நடந்த 6 கோடி ரூபாய் நகைத் திருட்டைக் காவல் துறையினர் கண்டறிந்து, குற்றவாளிகளைக் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.
டெல்லி நஜாப்கரில் 28 வயதான நாகேஷ் குமார், 23 வயதான சிவம் மற்றும் 22 வயதான மனிஷ் குமார் வசித்து வருகின்றனர். இவர்கள் கொள்ளையடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. அந்த காட்சிப் பதிவில், இரண்டு பேர் தெருக்களில் நடந்து வருகின்றனர். அதில் ஒருவர் காவல் துறை அதிகாரி உடையில் இருக்கிறார். அவர்கள் இருவரை நிறுத்துகின்றனர்.