கள்ளக்குறிச்சி சம்பவம்: யூடியூப் சேனல்கள் நீதிமன்ற உத்தரவை வாபஸ் பெற கோருவது ஏன்?

Share

  • நபில் அஹமது
  • பிபிசி தமிழுக்காக

கள்ளக்குறிச்சி உயர் நீதிமன்றம்

ஊடகங்களின் கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்தது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவு உள்ளது என்று யூடியூப் சேனல்களை நடத்தி வரும் சில பத்திரிகையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி உயிரிழந்தார். அதில் சந்தேகம் உள்ளதாக மாணவியின் தாயார் தரப்பிலும் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பிலும் கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு போரட்டமும் அதைத்தொடர்ந்து கலவரமும் நடந்தன.

இந்த போரட்டத்தில் ஈடுபட்டோரில் நூற்றுக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். பள்ளி தாளாளர், ஆசிரியர், பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

இதில், பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரை ஆகஸ்ட் 26ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீனில் விடுவித்தது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com