விராட் கோலி: பாகிஸ்தான் பவுலருக்கு ‘ஆட்டோகிராஃப்’ ஜெர்சியை பரிசளித்த தருணம்

Share

விராட் கோலி

பட மூலாதாரம், BCCI/Twitter

(இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று(30/08/2022) வெளியான சில முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து அளிக்கிறோம்.)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி, தனது ஜெர்சியில் ஆட்டோகிராஃப் போட்டு, அதை பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் ஹேரிஸ் ராஃபுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார் என்று இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதுறித்த செய்தியில், இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. நடப்பு ஆசிய கோப்பையின் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் துபாய் கிரிக்கெட் அணிகள் துபாய் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடின. இந்தப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதோடு, இது கோலிக்கு 100-வது சர்வதேச டி20 போட்டி.

இந்தப் போட்டீயில் அவர் 35 ரன்களை எடுத்திருந்தார். இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது அவருடைய ஆட்டம். இந்நிலையில், ஆட்டம் முடிந்ததும் இந்திய ஜெர்சியில் அவருடைய ஆட்டோகிராஃப் போட்டு, அதை பாகிஸ்தான் பந்து வீச்சாளர் ஹேரிஸ் ராஃபிடம் கொடுத்தார். அவரும் அதை மகிழ்ச்சியுடன் பெற்று செல்கிறார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com