IND VS PAK: இந்தியா -பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் பரபரப்புக்குக் காரணம் என்ன?

Share

  • ப்ரதீப் மேகசின்
  • பிபிசி ஹிந்திக்காக

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி

பட மூலாதாரம், Reuters

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியாவும் பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதும் போது வித்தியாசமான சுவாரஸ்யம் இருக்கும். இந்த இரண்டு நாடுகளும் இப்போது தங்களுக்குள் விளையாடுவது அரிதாகிவிட்டது.

இரண்டு ஆண்டுகளில், அதுவும் ஐசிசி போட்டிகளில், மிகச் சிலவற்றிலேயே நேருக்கு நேர் மோதியுள்ளன. ஆகையால் இந்த ஆட்டத்த்ன் த்ரில் வேறு லெவலில் இருக்கும். இது கிரிக்கெட் போட்டியாக மட்டும் பார்க்கப்படாமல் அரசியல் ரீதியாகவும் பார்க்கப்படுவது தான் இதற்குக் காரணம்.

இரு நாடுகளுக்கிடையேயான இந்தப் போட்டி, கிரிக்கெட் மைதானத்திற்கும் அப்பாற்பட்ட ஒன்று. இது தவிர இந்தியா, பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையே நட்புறவும் உள்ளது. அவர்களின் மொழியும் பேச்சுவழக்கும் ஒன்று போல உள்ளது. அவர்கள் ஒரே மாதிரியான சூழ்நிலையில் இருந்து வருகிறார்கள், எனவே இந்தியா மற்றும் பாகிஸ்தானின் போட்டிகளில் இருப்பது போல ஒரு விறுவிறுப்பை வேறு எந்த இரு நாடுகளுக்குமிடையேயும் பார்க்க முடியாது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிகளை மிக அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பும், பல நினைவுகளைப் பொக்கிஷமாக வைத்திருக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு சென்றதில் மூன்று முறை எனக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்புகள் 1997, 2004 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் கிடைத்தன.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com