பில்கிஸ் பானு கூட்டு வன்புணர்வு: குற்றவாளிகள் நுழைந்ததை கொண்டாடிய கிராமத்தினர் – கள நிலவரம்

Share

  • ராக்ஸி காக்டேகர் சாரா
  • பி பி சி செய்தியாளர்

பில்கிஸ் பானு

பட மூலாதாரம், ANI

குஜராத்தின் மிக கொடூர குற்றங்களின் வரலாற்றில், ரந்திக்பூருக்கு எந்த அறிமுகமும் தேவையில்லை. இந்த இடம் 2002 ஆம் ஆண்டு பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வல்லுறவு வழக்கால் அறியப்பட்டது.

மார்ச் 3, 2002 அன்று நடந்த குஜராத் கலவரத்தின் போது, பில்கிஸ் பானு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, அவரது குடும்ப உறுப்பினர்கள் 14 பேர் கொல்லப்பட்டனர்.

இறந்தவர்களில் பில்கிஸ் பானுவின் மூன்று வயது மகளும் அடங்குவார்.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து, 2008-ம் ஆண்டு பாம்பே செஷன்ஸ் நீதிமன்றம் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com