வனத்துறையினர் 7 குழுக்களாக பிரிந்து, 70க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொடர்ந்து யானையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல கேரளா வனத்துறையினரும் சிறப்புக் குழு அமைத்து, யானையை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றது.
இந்நிலையில் அந்த யானை தோலம்பாளையம் செங்குட்டை அருகே உள்ள வனப்பகுதியில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு சிகிச்சையளிப்பதற்காக, கும்கி யானையுடன் வனத்துறையினர் அங்கு விரைந்துள்ளனர். ஆனால், யானையின் உடல்நிலை என்ன நிலையில் இருக்கிறது என்பது பற்றிய உறுதியான தகவல் கிடைக்கவில்லை. யானையை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது வனத்துறை.