சல்மான் ருஷ்டிக்கு கத்திக்குத்து – “உயிருடன் இருக்கிறார்” என நியூயார்க் ஆளுநர் தகவல்

Share

  • சாம் காப்ரால்
  • பிபிசி நியூஸ், வாஷிங்டன்

சல்மான் ருஷ்டி தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

நியூயார்க்கில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அடையாளம் தெரியாத நபரால் கத்தியால் குத்தப்பட்ட பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி உயிருடன் இருப்பதாக அந்த மாகாண ஆளுநர் கேத்தி ஹோச்சுல் தெரிவித்துள்ளார்.

அவரை குத்திய நபர் தொடர்பான மேலதிக தகவல்கள் விசாரிக்கப்பட்டு வருவதாக ஆளுநர் கூறினார்.

சாத்தானின் வசனங்கள் என்ற புத்தகத்தை எழுதிய பின்னர் பல ஆண்டுகளாக மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி நியூயார்க்கில் ஒரு மேடையில் வைத்து கத்தியால் குத்தப்பட்டு தாக்கப்பட்டார்.

புக்கர் பரிசு வென்றவரான இவர், லாப நோக்கற்ற ஷட்டாக்குவா நிறுவன நிகழ்வில் விரிவுரையாற்றிக் கொண்டிருந்தபோது தாக்குதலுக்கு ஆளானார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com