செஸ் ஒலிம்பியாட்: நரேந்திர மோதி படத்துடன் தயார் நிலையில் மேடை – கடைசி நேர பரபரப்பு

Share

சென்னை ஒலிம்பியாட்

44ஆவது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் படத்தை பேனர்களில் இடம்பெறச் செய்யவில்லை என்று பாரதிய ஜனதா கட்சியினர் குற்றம்சாட்டி வந்த நிலையில், எல்லா இடங்களிலும் மோதியின் படத்தை வைத்து நிகழ்ச்சிக்கு ஆயத்தமாகியிருக்கிறது தமிழ்நாடு அரசு.

சென்னையில் 44வது செஸ் ஒலிம்பியாட், மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் சென்னை நகரின் முக்கிய சந்திப்புகள், சாலைகளில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் மற்றும் நிகழ்ச்சிப் பகுதியில் பிரதமர் நரேந்திர மோதியின் பெயர் மற்றும் படங்கள் சரியான வகையில் இல்லை என்று பாரதிய ஜனதா கட்சியினர் கடந்த இரண்டு தினங்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

பல இடங்களில் இடம்பெற்ற விளம்பர டிஜிட்டல் போர்டுகளில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் படம் மட்டுமே இடம் பெற்றிருந்தது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com