வெள்ளி பொன்னிறம் அல்லது வைக்கோல் நிறத்தில் தலைமுடி நீட்டிக்கொண்டிருக்கும். முதன்முதலில் 1973-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த சிண்ட்ரோம், மரபணுவில் ஏற்படும் ஜீன் மாறுதல்களால் உருவாகிறது.
இந்நிலையைக் குணப்படுத்த சிகிச்சைகள் இல்லை என்றாலும், பிள்ளைகள் வளர்ந்து பருவமடையும்போது ஓரளவுக்கு மாறலாம் அல்லது முழுமையாக சரியாகலாம் என அமெரிக்க அரசின் மரபணு மற்றும் அரிய நோய்கள் தகவல் மையம் கூறியுள்ளது.
ஒரு வயதுவரை அவளுடைய முடி பஞ்சு போன்றுதான் இருந்தது, வளரவளர அது வெளியே நீண்டு தெரிய ஆரம்பித்தது என குழந்தையின் தாய் சார்லோட் கூறியுள்ளார்.
இந்தக் குழந்தையின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றன.