இதுமட்டுமன்றி அஃப்ஷீன் பெருமூளை வாதத்தாலும் பாதிக்கப்பட்டதால், அவளால் தன் கல்வியிலும் கவனம் செலுத்த முடியவில்லை. பன்னிரண்டு வருடங்கள் வலியிலேயே தவித்துள்ளாள், அஃப்ஷீன்.
இந்நிலையில் அலெக்ஸாண்ட்ரியா தாமஸ் எனும் பிரிட்டிஷ் பத்திரிக்கையாளர், அஃப்ஷீன் படும்பாடுகள் குறித்து எழுதியிருந்தார். டெல்லி, அப்போலோ மருத்துவமனையில் பணிபுரியும் ராஜாகோபாலன் கிருஷ்ணன் என்ற மருத்துவர் அதைப் பார்த்துள்ளார். அவர் அஃபஷீனுக்கு இலவசமாக சிகிச்சை வழங்குவதாக மார்ச் மாதம் அறிவித்தார்.
கடந்த ஆண்டு இந்தியா வந்த அஃப்ஷீனுக்கு நான்கு பெரிய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. அதன் பிறகு கழுத்துக்கான முக்கிய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
“சரியான சிகிச்சைகள் கிடைக்காதபட்சத்தில், அவளால் நீண்ட நாள்கள் உயிர் வாழ்ந்திருக்க முடியாது. தற்போது அப்பெண் சிரிக்கிறார், பேசுகிறார்…” என மருத்துவர் ராஜகோபாலன் கிருஷ்ணன் கூறியுள்ளார். அறுவை சிகிச்சைக்குப் பிறகான அஃப்ஷீனின் உடல்நல முன்னேற்றங்கள் குறித்து மருத்துவர், ஸ்கைப் மூலம் வாரம்தோறும் கண்காணித்து வருகிறார்.