மீண்டும் ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – தொடர்ச்சியாக 2வது கோப்பை

Share

மீண்டும் ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - தொடர்ச்சியாக 2வது கோப்பை

பட மூலாதாரம், ANI

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

ஆமதாபாத்தில் நடந்த 2026 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் இன்று (மே 31) குஜராத் டைட்டன்ஸை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு.

17 ஆண்டுகளில் ஒரு கோப்பை கூட வெல்லாமல் இருந்த அந்த அணி தற்போது தொடர்ச்சியாக 2 ஆண்டுகளில் 2 கோப்பைகள் வென்றிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் (2010, 2011) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (2019, 2020) அணிகளுக்குப் பிறகு தொடர்ந்து 2 ஐபிஎல் கோப்பைகள் வெல்லும் மூன்றாவது அணி ஆர்சிபி.

இந்த இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேப்டன் ரஜத் பட்டிதார் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதேசமயம், தான் டாஸ் வென்றிருந்தால் முதலில் பேட்டிங் செய்யவே தீர்மானித்திருப்பேன் என்று டைட்டன்ஸ் கேப்டன் ஷுப்மன் கில் டாஸின்போது தெரிவித்தார்.

முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழக்காமல் 50 ரன்கள் எடுத்தார். ஆர்சிபி பௌலர்களில் அதிகபட்சமாக ரசிக் தார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அந்த இலக்கை சேஸ் செய்த ஆர்சிபி 18 ஓவர்களில் இலக்கை எட்டியது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் எடுத்து தன் அணியின் வெற்றியை உறுதி செய்தார் விராட் கோலி.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com