அமெரிக்க கடற்படை முற்றுகைக்கு நடுவே இரானுடன் மீண்டும் பேச திட்டமா? டிரம்ப் புதிய தகவல்

Share

இரான் - அமெரிக்கா, அமெரிக்க கடற்படை முற்றுகை, ஹோர்மூஸ் நீரிணை, டிரம்ப்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இரண்டு வார கால போர்நிறுத்தத்தின் போது இரானின் பொருளாதார உயிர்நாடியை முடக்குவதை இந்த முற்றுகை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இரானில் நடந்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் மீண்டும் தொடங்கக்கூடும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததைத் தொடர்ந்து, இரான் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டது.

“நீங்கள் அங்கேயே (பாகிஸ்தான்) இருக்க வேண்டும், உண்மையில், அடுத்த இரண்டு நாட்களில் ஏதேனும் நடக்கலாம். நாங்கள் அங்கு செல்ல அதிக விருப்பத்துடன் இருக்கிறோம்,” என்று நியூயார்க் போஸ்ட் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் கடல்வழி முற்றுகையை மீறி இந்த நடவடிக்கையின் முதல் 24 மணி நேரத்தில் இரானிய துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு எந்தக் கப்பல்களும் செல்லவில்லை என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் டிரம்பின் இந்த கருத்துகள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க...
படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க…

‘பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்க வாய்ப்பு’

டிரம்பின் கருத்துகளுக்கு இரான் தரப்பு இன்னும் பதிலளிக்கவில்லை, ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டெரெஸ் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்குவதற்கு ‘அதிக வாய்ப்பு’ இருப்பதாகக் கூறினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com