‘தந்தை போன்றவர் எனக் கூறி தவறு செய்தார்’ : அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார்

Share

அண்ணாபல்கலைக் கழகம்

பட மூலாதாரம், Anna University

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

மாணவி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஞானவேல் பாபுவை வெள்ளிக்கிழமையன்று நெல்லையில் காவல்துறை கைது செய்துள்ளது.

தன்னுடைய குடும்ப கஷ்டத்தை அறிந்து உதவி செய்வதுபோல பேராசிரியர் தொடர்ந்து அத்துமீறியதாக, சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மாணவி அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு இந்திய மாணவர் சங்கத்தினர் போராடிய நிலையில், இரண்டு பிரிவுகளில் பேராசிரியர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... 

https://www.bbc.com/tamil/topics/cx2r5pqvxy1t
படக்குறிப்பு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க…

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த வியாழக்கிழமையன்று காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

புகார் மனுவில், கடந்த மூன்று ஆண்டுகளாக நேரடியாகவும் தொலைபேசி வாயிலாகவும் பேராசிரியர் ஞானவேல் பாபு பல்வேறு வகைகளில் தொந்தரவு கொடுத்து வந்ததாகத் தெரிவித்துள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com