பங்குச் சந்தையில் முதலீடு செய்வது எப்படி? சரியான நேரம் எது? 7 முக்கிய கேள்வி-பதில்கள்

Share

பங்குச் சந்தை, முதலீடு, பணம், வர்த்தகம்

பட மூலாதாரம், Getty Images

செய்திகள் அல்லது பொது விவாதங்கள் மூலம் பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்கள் குறித்து நாம் தொடர்ந்து கேள்விப்படுகிறோம். ‘வேலையை இழந்த பிறகும் சிலருக்குப் பங்குச் சந்தை எவ்வாறு கைகொடுத்தது’ என்பது போன்ற கதைகளையும் நாம் கேட்டிருக்கிறோம்.

ஆனால், பங்குச் சந்தையில் நேரடியாக வர்த்தகம் செய்வதற்கான மனநிலை பலருக்கு இருப்பதில்லை. பலர் இதைப் பற்றிப் போதிய அறிவு இல்லாததாலோ அல்லது அதிக ‘ரிஸ்க்’ எடுக்க விருப்பமில்லாததாலோ இந்த முதலீட்டில் இருந்து விலகி இருக்கிறார்கள்.

சமீபகாலமாக நாட்டில் டீமேட் கணக்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 2024 டிசம்பர் இறுதி வரையிலான தரவுகளின்படி, இந்த எண்ணிக்கை 17 கோடியைத் தாண்டியுள்ளது.

இருப்பினும், டீமேட் கணக்கு என்றால் என்ன, அது எதற்காகப் பயன்படுகிறது, பங்குச் சந்தையில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு அவசியமா என்பது போன்ற கேள்விகள் பலரிடம் உள்ளன. இத்தகைய டீமேட் கணக்குகள் பலவற்றில் எவ்விதப் பரிவர்த்தனையும் நடப்பதில்லை.

பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்பியும், போதிய தகவல்கள் இல்லாததால் தயங்குபவர்கள் அல்லது சாமானிய முதலீட்டாளர்கள் போன்றோருக்கு மனதில் எழும் ஏழு முதன்மைக் கேள்விகளுக்கான பதில்களை இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்வோம்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com