தன்னுடைய கிராமத்தின் அழகை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு ஆறு மாதங்களுக்கு முன் எல்லோரையும் திரும்பிப்பார்க்க வைத்த கூமாப்பட்டி தங்கப்பாண்டி ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிய “சிங்கிள் பசங்க’ நிகழ்ச்சியில் டைட்டில் வென்றிருக்கிறார்.
‘அந்தப் பையன் கிட்ட என்ன திறமைங்க இருக்கு, சும்மா ஊர்ல இருக்கிற அணைக்கட்டுல குளிச்சதை வீடியோ எடுத்து, ‘ஏங்க எங்க ஊருக்கு வாங்க’னு ராகம் பாடினார். வேலை வெட்டி இல்லாத ஒரு கூட்டம் அதையும் வைரலாக்க, அந்தாளு டிவி நிகழ்ச்சிக்கு வந்துட்டார். இதுல என்ன சிறப்பு இருக்கு’ என எதிர்மறையான விமர்சனங்களை வைப்பவர்கள், ‘இனி என்னங்க அவருக்கு சினிமா வாய்ப்பு வரும், நடிகராகிடுவார்’ எனக் கொஞ்சம் புகைச்சலுடனேயே பேசுகிறார்கள்
எனில், கூமாப்பட்டி தங்கப்பாண்டியை பாராட்டுவதில் அர்த்தமில்லையா? டைட்டில் வென்றதைத் தாண்டி அவரைப் பாராட்ட நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
என்னென்ன பார்க்கலாமா?