இந்தியா – ரஷ்யாவை சேர்ந்த நிபுணர்கள் புதின் இந்திய வருகை பற்றிக் கூறுவது என்ன? முழு அலசல்

Share

புதின் இந்திய வருகையால் இருநாட்டுக்கும் என்ன லாபம்? நிபுணர்கள் அலசல்

பட மூலாதாரம், ANI

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இருநாள் பயணமாக டிசம்பர் 4-ஆம் தேதி இந்தியாவிற்கு வந்தார். புதினின் இந்திய வருகை அதிகளவில் விவாதிக்கப்படுகிறது. மேற்கத்திய நாடுகள் இந்த வருகையை கூர்ந்து கண்காணித்து வருகின்றன.

டிசம்பர் 1-ஆம் தேதி பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் இணைந்து டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் எழுதியிருந்தனர். அதில் யுக்ரேன் போரை நீட்டிப்பதற்கு ரஷ்யாவை குற்றம்சாட்டியிருந்தனர்.

அதற்குப் பதிலாக இந்தியாவுக்கான ரஷ்யா தூதர் டெனிஸ் அலிபோவ் அதே நாளிதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் தூதரக அதிகாரிகள் இணைந்து எழுதிய கட்டுரை யுக்ரேன் போர் தொடர்பாக இந்திய மக்களை ‘தவறாக வழிநடத்துகிறது’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

மூன்று நாடுகளின் தூதரக அதிகாரிகள் இணைந்து எழுதிய கட்டுரையை ரஷ்யாவுக்கான முன்னாள் இந்திய தூதரும் இந்தியாவின் முன்னாள் வெளியுறவு செயலாளருமான கன்வால் சிபல் கடுமையாக விமர்சித்திருந்தார்.

ஆனால் பெர்லினில் உள்ள குளோபல் பப்ளிக் பாலிசி இன்ஸ்டிடியூட்-இன் இயக்குநர் தோர்ஸ்டன் பென்னர் அந்த கட்டுரைக்கு ஆதரவு தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். “அந்தக் கட்டுரையில் ஒரு வரி கூட இந்திய வெளியுறவு கொள்கை பற்றி இல்லை. இதை எவ்வாறு ஒருவர் ராஜ்ஜிய அவமானம் அல்லது தலையீடு எனக் கருத முடியும் என்பதை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை.” என அந்தப் பதிவில் தெரிவித்திருந்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com