எண்ணூரில் 9 அசாம் தொழிலாளர்கள் உயிரிழப்பில் என்ன நடந்தது? பிபிசி தமிழ் களஆய்வு

Share

எண்ணூரில் 9 அசாம் தொழிலாளர்கள் உயிரிழப்பில் என்ன நடந்தது?

“சுமார் 130 அடி உயரத்தில் வேலை என்பதால் பத்து பேரும் பாதுகாப்பு பெல்ட் அணிந்திருந்தனர். இரும்புக் குழாய்களைக் கொண்டு மேற்கூரை அமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருந்தன. மாலை நேரம் என்பதால் வேலை முடிந்து கிளம்ப தயாராக இருந்தோம். திடீரென மேற்கூரை சரிந்தது” எனக் கூறி அழுகிறார், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹித்தீஷ்.

எண்ணூர் அனல்மின் நிலையத்தில் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் இறந்த ஒன்பது பேரில் ஒருவரான திமராஜ் துசன் என்பவரின் சகோதரர் இவர்.

பணியில் கவனக்குறைவாக செயல்பட்டதாக தனியார் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த நான்கு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறுகிறது. ஒன்பது பேர் இறக்கும் அளவுக்கு கட்டுமானப் பணியில் என்ன நடந்தது?

திருவள்ளூர் மாவட்டத்தில், எண்ணூர் அனல்மின் நிலையம் அமைந்துள்ளது. இங்குள்ள நான்காவது அலகின் கொதிகலன் பிரிவில் நிலக்கரியை சேமிக்கும் வகையில் வளைவு போன்ற கூடாரத்தை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com