3. கூட்டத்திற்கு வருகிற பொதுமக்களும் என்ன மாதிரியான கூட்டம், அதற்கு யாரெல்லாம் போக வேண்டும் என்பதை அவர்களும் யோசித்து முடிவெடுக்க வேண்டும்.
விஜய் போன்ற பிரபலங்கள் இது போன்ற பிரச்சாரங்களுக்கு முதல் முறையாக வருவதால் கட்டுக்கடங்காத கூட்டம் வரும்.
எனவே இது போன்ற கூட்டங்களுக்கு குழந்தைகளையும், முதியவர்களையும், பெண்களையும் அழைத்து வருவதைத் தவிர்க்க வேண்டும்.
அப்படியே வந்தாலும் அவர்களைப் பாதுகாப்பாக ஒரு ஓரமாகவோ அல்லது நெரிசலோ தள்ளுமுள்ளோ ஏற்படும்போது பாதுகாப்பாக வெளியேற வழி உள்ள இடத்தில் நிற்க வைக்க வேண்டும்.

நடந்து முடிந்த வேதனையான நேரத்தில் அறிவுரை கூறுவதாக நினைக்காதீர்கள்.
தமிழக அரசியல் வரலாற்றில் இது போன்ற விபத்து நடைபெறுவது இதுவே முதல் முறை என்பதால் இதுவே கடைசியுமாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் எங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கின்றோம்.
இந்த விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் கண்ணீர் அஞ்சலி செலுத்துவதோடு அவர்கள் குடும்பங்களுக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.