மயிலாடுதுறை: காதல் விவகாரத்தில் தலித் இளைஞர் கொலைச் சம்பவத்தின் பின்னணி என்ன?

Share

மயிலாடுதுறையில் வைரமுத்து என்பவர் நேற்று (செப்.17) கொல்லப்பட்டுள்ளார்.
படக்குறிப்பு, வைரமுத்து

காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக வைரமுத்து என்ற தலித் இளைஞர் கொல்லப்பட்டதாக, செப்டெம்பர் 17 அன்று மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஒரே சாதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்வதற்கு முடிவெடுத்ததால் பட்டியல் சாதி இளைஞர் கொல்லப்பட்டாரா? பின்னணி என்ன?

மயிலாடுதுறை மாவட்டம், அடியமங்கலம் கிராமத்தில் பெரிய தெருவில் வசித்து வரும் குமார் என்பவரின் மகன் வைரமுத்துவும் அதே பகுதியைச் சேர்ந்த 26 வயதான பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.

டிப்ளமோ படித்துள்ள வைரமுத்து, இருசக்கர வாகன மெக்கானிக் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். எம்.பி.ஏ படித்துள்ள இளம்பெண், சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com